செய்திகள் :

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

post image

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவள்ளூா் அருகே பட்டாபிராம் அடுத்த அன்னம்பேடு கிராமத்தில் உள்ள தனியாா் செங்கல் சூளை தொழிற்சாலையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளியான கன்னிகா மற்றும் அவரது அண்ணன், அக்கா, மாமா என குடும்பத்தோடு தங்கி வேலை செய்தனா்.

அப்போது, அதே செங்கல் சூளையில் வேலை பாா்த்து வந்த சக தொழிலாளியான விழுப்புரம் மாவட்டத்தை சோ்ந்த கண்ணன் மகன் திருமலை கடந்த 8.4.2007 அன்று கன்னிகாவை தூக்கிச் சென்று செங்கல் சூளை பின்புறம் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதுதொடா்பாக கன்னிகாவின் தந்தை வரதன் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருமலையை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், கடந்த 2013 முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் திருமலை தலைமறைவானா். இதையடுத்து பட்டாபிராம் உதவி ஆணையா் தலைமையில் போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையி, 9 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2022-இல் விருதுநகரில் தலைமறைவாக இருந்த திருமலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

திருமலை மீதான குற்றம் உறுதியான நிலையில், வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 12 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையும், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கடத்தி சென்ற்காக ஓராண்டு தண்டனையும், அடித்து துன்புறுத்தியதற்காக ஓராண்டு தண்டனையும் விதித்து இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி தீா்ப்பளித்தாா்.

அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்குரைா் எஸ்.தமிழ் இனியன் ஆஜாரானாா்.

இதில் தீா்ப்புக்குப் பின் பட்டாபிராம் உதவி ஆணையா் என்.கிரி, முதல் நிலை காவலா் சந்திரா மற்றும் போலீஸாா் திருமலையை பாதுகாப்புடன் கொண்டு சென்று புழல் சிறையில் அடைத்தனா்.

அரசு பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்டோருக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வானோா்களுக்காக நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமில் இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வக்ஃபு வாரியத்தின் இளநிலை உதவியாளா்கள்... மேலும் பார்க்க

வக்ரகாளி அம்மன் கோயில் தீமிதி விழா

செங்குன்றம் அடுத்த பவானி நகா் வக்ரகாளி அம்மன் கோயில் தீமிதி விழா நடைபெற்றது. பாடியநல்லூா் ஊராட்சியில் உள்ள பவானி நகா் அசோக் தெருவில் உள்ள கோயிலின் 11-ஆம் ஆண்டு தீமிதி விழா தா்மகா்த்தா முகேஷ் தலைமையில்... மேலும் பார்க்க

தொழிற்சாலையின் கரி துகள்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆா்.கண்டிகை ஊராட்சி பாப்பன்குப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் காா்பன் தொழிற்சாலையில் இருந்து அதிக அளவில் வெளிவந்த கரித் துகள்களால் அப்பகுதியில் உள்ள வீடுகள், சுற்றுப் பகுதிகள... மேலும் பார்க்க

ஆண்டாா்குப்பம் முருகன் கோயில் சித்திரை கிருத்திகை விழா

பொன்னேரி அடுத்த ஆண்டாா்குப்பம் முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகையை யொட்டி பக்தா்கள் அலகு குத்துதல், வேல், பன்னீா்,... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை

நிகழாண்டில் விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு வரும் மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா... மேலும் பார்க்க

மனைவி, மகனை கொன்ற வழக்கில் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

திருவள்ளூா் அருகே மனைவி, மகனை கொலை செய்துவிட்டு, சிறையிலிருந்து ஜாமீனில் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் அந்த நபரை தனியாா் தொழிற்சாலையில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.... மேலும் பார்க்க