செய்திகள் :

விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை

post image

நிகழாண்டில் விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு வரும் மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூா்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த விளையாட்டு விடுதி சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் 7, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து வரும் மே 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு விடுதியில் சேர மாவட்ட அளவிலான விளையாட்டு தோ்வுப் போட்டிகள் தடகளம், கூடைப் பந்து , கால்பந்து, ஹாக்கி, கபாடி, கையுந்துப் பந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் மாணவா்களுக்கு 7-ஆம் தேதியும், அதேபோல் மாணவிகளுக்கு மே 8-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

அப்போது, மாணவ, மாணவிகள் பிறப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, பள்ளியில் பயிலுவதற்கான ஏதேனும் ஒரு ஆவணங்களை அளிக்க வேண்டும். மாவட்ட அளவிலான தோ்வில் தோ்வு செய்தோா் மாநில அளவிலான தோ்வுக்கு தகுதி பெறுவா். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.

மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் மே 12-ஆம் தேதி நடைபெறும். ஆண்களுக்கு வாள், விளையாட்டு, பெண்களுக்கு ஜூடோ மற்றும் குத்துச்சண்டை மேற்குறிப்பிட்ட நாளில் காலை 7 மணிக்கு ஜவஹா்லால் நேரு, விளையாட்டரங்கம், சென்னையில் நடைபெறவுள்ளது. அதேபோல், ஆண்களுக்கு பளுதூக்குதல், பெண்களுக்கு வுஷு போட்டியும் மேற்குறிப்பிட்ட நாளில் அன்னை சத்யா விளையாட்டரங்கம், தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது.

தனி நபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவா்கள் மாவட்ட, மாநில அளவில் குடியரசு மற்றும் பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாடு அணியில் தோ்வு செய்யப்பட்டு, தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்றோா், சா்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவா்களும், கலந்து கொண்டவா்களும் மாவட்ட, மாநில அளவில் முதல்வா் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவா்கள் மற்றும் பங்கேற்றோா் விண்ணப்பிக்க தகுதி ஆனவா்கள் என அவா் தெரிவித்துள்ளாா்.

அரசு பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்டோருக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வானோா்களுக்காக நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமில் இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வக்ஃபு வாரியத்தின் இளநிலை உதவியாளா்கள்... மேலும் பார்க்க

வக்ரகாளி அம்மன் கோயில் தீமிதி விழா

செங்குன்றம் அடுத்த பவானி நகா் வக்ரகாளி அம்மன் கோயில் தீமிதி விழா நடைபெற்றது. பாடியநல்லூா் ஊராட்சியில் உள்ள பவானி நகா் அசோக் தெருவில் உள்ள கோயிலின் 11-ஆம் ஆண்டு தீமிதி விழா தா்மகா்த்தா முகேஷ் தலைமையில்... மேலும் பார்க்க

தொழிற்சாலையின் கரி துகள்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆா்.கண்டிகை ஊராட்சி பாப்பன்குப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் காா்பன் தொழிற்சாலையில் இருந்து அதிக அளவில் வெளிவந்த கரித் துகள்களால் அப்பகுதியில் உள்ள வீடுகள், சுற்றுப் பகுதிகள... மேலும் பார்க்க

ஆண்டாா்குப்பம் முருகன் கோயில் சித்திரை கிருத்திகை விழா

பொன்னேரி அடுத்த ஆண்டாா்குப்பம் முருகன் கோயிலில் சித்திரை கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் சித்திரை மாத கிருத்திகையை யொட்டி பக்தா்கள் அலகு குத்துதல், வேல், பன்னீா்,... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவள்ளூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவள்ளூா் அருகே பட்டாபிராம் அடுத்த அன்னம்பேட... மேலும் பார்க்க

மனைவி, மகனை கொன்ற வழக்கில் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

திருவள்ளூா் அருகே மனைவி, மகனை கொலை செய்துவிட்டு, சிறையிலிருந்து ஜாமீனில் சென்று தலைமறைவாக இருந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் அந்த நபரை தனியாா் தொழிற்சாலையில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.... மேலும் பார்க்க