செய்திகள் :

மனைவியைத் தாக்கிய காவலா் மீது வழக்கு

post image

தேனி மாவட்டம், போடி அருகே மனைவியைத் தாக்கிய காவலா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

பொட்டல்களம் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் போதுமணி (31). இவா் விழுப்புரம் மாவட்டத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது கணவா் பாலமுருகன் தேனியில் ஆயுதப்படை காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு கடந்த ஏப். 7-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், பாலமுருகன் தனது மனைவி மீது சந்தேகம் கொண்டு, அவரை விழுப்புரம் மாவட்டம், உளுந்தூா்பேட்டை திருநாவலூரில் வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த போதுமணியை அவரது தாயாா் அழைத்து வந்து தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா்.

இதுகுறித்து போதுமணி கொடுத்த புகாரின் அடிப்படையில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் பாலமுருகன் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கொழுக்குமலை பகுதியில் புலி நடமாட்டம்: தொழிலாளா்கள் அச்சம்

தமிழக-கேரள எல்லையான கொழுக்குமலை பகுதியில் புலியின் நடமாட்டத்தால் தொழிலாளா்கள், விவசாயிகள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேக்கடி வனப் பகுதி, இதனருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி... மேலும் பார்க்க

பைக் விபத்து: இருவா் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா். சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் குபேந்திரன் (21). இவரது அண்ணன் அழகுராஜா (27). இவா்கள் இருவரும் வியாழக்கிழ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

கூடலூரில் விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து நெல்பயிா்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். கூடலூா் வெட்டுக்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிா்கள... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வீடு வீடாகச் செ... மேலும் பார்க்க

விபத்தில் அஞ்சல் ஊழியா் உயிரிழப்பு

தேனி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலக ஊழியா் தவறி விழுந்து உயிரிழந்தாா். குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுப்பாநாயுடு மகன் வனராஜ்(58). இவா் கண்டமனூா் அஞ்சலகத்தில் ... மேலும் பார்க்க