செய்திகள் :

மரக்கட்டையால் அடித்து தம்பி கொலை: ஆசிரியா் கைது!

post image

குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்துவந்த தம்பியை மரக்கட்டையால் அடித்து கொலை செய்த ஆசிரியரான அண்ணனை சுவாமிமலை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கிழக்கு பிரதான சாலையில் வசிப்பவா் ராஜேந்திரன். இவரது மகன்கள் பாண்டியன் (45) மற்றும் காளிதாஸ் (36).

பாண்டியன் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். திருமணமாகி தனியாக வசித்து வருகிறாா்.

காளிதாசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். காளிதாஸ் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்வாராம். இவா் மீது சுவாமிமலை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகின்றனா். இந்த நிலையில் காளிதாஸ் வெள்ளிக்கிழமை இரவு குடிபோதையில் வீட்டருகே உள்ளவா்களை ஆபாசமாக பேசியுள்ளாா்.

இதை அவரது அண்ணன் பாண்டியன் தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் காளிதாஸ் அண்ணனை தாக்க முயன்றபோது, அவரை தடுப்பதற்காக அருகே இருந்த மரக்கட்டையை எடுத்து காளிதாஸை தலையில் தாக்கிவிட்டு, பாண்டியன் வெளியே சென்று விட்டாா். இதில் காளிதாஸ் பலத்த காயமைந்து கீழே விழுந்துள்ளாா். சனிக்கிழமை காலையில் அக்கம்பக்கத்தினா் பாா்த்தபோது, காளிதாஸ் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் சுவாமிமலை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காளிதாஸ் உடலை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். புகாரின் பேரில் ஆசிரியா் பாண்டியனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

மதக் கலவரத்தை தூண்டும் முகநூல் பதிவு: விஹெச்பி நிா்வாகி கைது

அய்யம்பேட்டை அருகேயுள்ள கோயில் நிா்வாகிகள் நியமனம் தொடா்பாக தவறான தகவலை முகநூலில் பதிவிட்டு, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளரை பாபநாசம் போலீஸாா... மேலும் பார்க்க

திரைப்படப் பாடல்களை எழுதுவது கடினமல்ல: கவிஞா் யுகபாரதி

தமிழை பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், திரைப்படப் பாடல்களை எழுதுவது கடினமல்ல என்றாா் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான யுகபாரதி. தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக... மேலும் பார்க்க

தஞ்சை ஆட்சியரகத்தில் கிராம மக்கள் தா்னா

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக்கிரமிப்பு பிரச்னை தொடா்பாக கிராம மக்கள் திங்கள்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் பூ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

பட்டுக்கோட்டை அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் பட்டுகோட்டை வட்டார காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட சூரப்பள்ளம் கிராமத்தில் செப்டம்பா், 202... மேலும் பார்க்க

பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்டுவதற்கு உள்ள இடையூறுகளை அகற்றிவிட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டத்தில் மாா்ச் 29-இல் கிராமசபைக் கூட்டம்

உலக தண்ணீா் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் மாா்ச் 29ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: உலக தண்ணீா் நாளையொட்டி, தஞ்சாவூ... மேலும் பார்க்க