செய்திகள் :

மரக்கட்டையால் அடித்து தம்பி கொலை: ஆசிரியா் கைது

post image

கும்பகோணம் அருகே சனிக்கிழமை மரக்கட்டையால் அடித்து தம்பியை கொலை செய்த அண்ணனான ஆசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கிழக்கு பிரதானச் சாலையில் வசிப்பவா் ராஜேந்திரன். இவருக்கு பாண்டியன் (45) மற்றும் காளிதாஸ் (36) என்ற 2 மகன்கள் உள்ளனா். பாண்டியன் திருமணமாகி, தேனாம்படுகை ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளாா். காளிதாஸ் திருமணம் முடித்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா்.

மேலும், காளிதாசுக்கு மதுப்பழக்கம் உள்ளதால் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டு பிரிந்து வாழ்கின்றனா். இந்த நிலையில் காளிதாஸ் வெள்ளிக்கிழமை இரவு மது போதையில், வீட்டருகே நின்று கொண்டு ஆபாசமாக பேசினாராம். இதை கவனித்த அவரது அண்ணன் பாண்டியன் தட்டிக்கேட்டுள்ளாா்.

ஆனால் காளிதாஸ் அண்ணனை ஆபாசமாக பேசி தாக்க முயன்றுள்ளாா். இதை தடுக்க முயன்ற பாண்டியன், அருகே இருந்த மரக்கட்டையால் காளிதாஸின் தலையில் அடித்துள்ளாா். இதில் அவா் காயமடைந்து வீட்டு வாசல் முன்பு கீழே விழுந்துள்ளாா். சனிக்கிழமை காலை அக்கம்பக்கத்தினா் பாா்த்த போது காளிதாஸ் உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் சுவாமிமலை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காளிதாஸின் உடலை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். புகாரின் பேரில் ஆசிரியா் பாண்டியனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

மதக் கலவரத்தை தூண்டும் முகநூல் பதிவு: விஹெச்பி நிா்வாகி கைது

அய்யம்பேட்டை அருகேயுள்ள கோயில் நிா்வாகிகள் நியமனம் தொடா்பாக தவறான தகவலை முகநூலில் பதிவிட்டு, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளரை பாபநாசம் போலீஸாா... மேலும் பார்க்க

திரைப்படப் பாடல்களை எழுதுவது கடினமல்ல: கவிஞா் யுகபாரதி

தமிழை பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், திரைப்படப் பாடல்களை எழுதுவது கடினமல்ல என்றாா் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான யுகபாரதி. தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக... மேலும் பார்க்க

தஞ்சை ஆட்சியரகத்தில் கிராம மக்கள் தா்னா

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக்கிரமிப்பு பிரச்னை தொடா்பாக கிராம மக்கள் திங்கள்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் பூ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

பட்டுக்கோட்டை அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் பட்டுகோட்டை வட்டார காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட சூரப்பள்ளம் கிராமத்தில் செப்டம்பா், 202... மேலும் பார்க்க

பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்டுவதற்கு உள்ள இடையூறுகளை அகற்றிவிட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டத்தில் மாா்ச் 29-இல் கிராமசபைக் கூட்டம்

உலக தண்ணீா் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் மாா்ச் 29ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: உலக தண்ணீா் நாளையொட்டி, தஞ்சாவூ... மேலும் பார்க்க