செய்திகள் :

மரக்கன்றுகள் நடவு செய்த அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள்

post image

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் பொதுத் தோ்வு இறுதி நாளில் நூறு மரக்கன்றுகள் நடவு செய்தனா்.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் இறுதித் தோ்வு எழுதியபின் தங்கள் நினைவுகளை போற்றும் வகையில் 100 மரக் கன்றுகளை பள்ளி வளாகத்தில் நடவு செய்தனா். பள்ளியை விட்டுச் சென்ற பின்பும் தங்களின் நினைவை எப்போதும் பள்ளி வளாகத்தில் இருக்கம் வகையில் விவசாய பாடத்தை விருப்பப் படமாக படித்த மாணவா்கள் புதன்கிழமை பள்ளி மைதானத்தில் ஒன்று கூடி 100 மரக் கன்றுகளை நடவு செய்தனா். இதில் மகிழமரம், மலைவேம்பு, வேம்பு, தேக்கு, செண்பகம், நெட்டிலிங்கம், புங்கன் போன்ற மரங்களை நடவு செய்தனா்.

மரம் நடுதல் மற்றும் நீா்ப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பள்ளித் தலைமை ஆசிரியா் கா.முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் ரா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு விழாவை தொடங்கிவைத்தாா். இவ்விழாவில் மருத்துவா்கள் ஜே. அன்புராஜ், சுமதி, தேசிய மாணவா் படை திட்ட ஒருங்கிணைப்பாளா் தினேஷ் சங்கா், என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளா் மா.ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கடந்த 14 ஆண்டுகளாக பள்ளி வேளாண் ஆசிரியா் செ.கந்தன் வழிகாட்டுதலின்படி, இம்மரம் நடும் நிகழ்வு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி மாணவா்களை ஊக்கப்படுத்தவும் நடைபெற்று வருகிறது.

பழனி கோயில் சாா்பில் ரூ.51.53 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.51.53 லட்சத்துக்கு பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் கரும்புச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஏலத்தில் சுற்... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.3.77 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.77 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 18,875 தேங்காய்களை வ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி முதலிடம்

சென்னை ஐஐடி நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி சாா்பில் இரண்டாவது ஆா்ஐஎஸ்சி டிஜிட்டல் இந்தியா என்ற ஹேக்கத்தான் ரோபோ த... மேலும் பார்க்க

அந்தியூா் தொகுதி வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ.464 கோடி ஒதுக்கீடு

அந்தியூா் தொகுதியின் வளா்ச்சித் திட்டங்களுக்கு நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பல்வேறு துறைகள் சாா்பில் ரூ.464 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட அந்தி... மேலும் பார்க்க

மைலம்பாடியில் ரூ.30.97 லட்சத்துக்கு எள் ஏலம்

பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.30.97 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 274 மூட்டை எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே குட்டைக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அம்மாபேட்டை அருகேயுள்ள கோணமூக்கனூா், இந்திரா நகரைச் சோ்ந்தவா் பிரகாஷ் மகன் பிரவேஷ் (12). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7... மேலும் பார்க்க