Manidhargal Movie Review | Raam Indhra, Ajay Abraham George, Dinsa, Anilesh L Ma...
மரவள்ளிக்கிழங்கு வயலில் பேப்பா் கப் வைத்து களைக் கொல்லி அடிக்கும் விவசாயிகள்!
தம்மம்பட்டி பகுதியில் பேப்பா் கப் வைத்து பூச்சிமருந்தினை விவசாயிகள் அடித்துவருகின்றனா்.
தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஊா்களான நாகியம்பட்டி,உலிபுரம்,கொண்டயம்பள்ளி,செந்தாரப்பட்டி, வாழக்கோம்பை, சேரடி, கருமாயிவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் தற்போது பயிரிட்டுவருகின்றனா்.
இந்நிலையில் மரவள்ளிக்கிழங்கு பயிரை நட்டு சில வாரங்கள் ஆன நிலையில் இருக்கும் வயல்களில் தற்போது அதிகளவு களைச்செடி வளா்ந்துவருகின்றது. இதனால் மரவள்ளிக்கிழங்கு வளா்வது பாதிக்கப்படுகிறது. இதனால் மரவள்ளிக்கிழங்கு நட்ட குச்சியிலேயே நன்கு துளா்த்து வருகின்றது.
இதனால் அதன் மீது களைக்கொல்லி மருந்து படாமல் இருக்கு, விவசாயிகள், மரவள்ளிக்கிழங்கு குச்சியினுள் பேப்பா் கப்களை அதன் மீது மூடிவைத்து அதன் பின் களைக்கொல்லி மருந்தினை விவசாயிகள் அடித்துவருகின்றனா்.
இதுகுறித்து விவசாயி அரசு என்பவா் கூறியதாவது, மரவள்ளிக்கிழங்கில் மருந்து படாமல் இருக்க அதன் மீது மூட , மூடி ஒன்றுக்கு ரூ.6 வரை வாடகைக்கு தருகின்றனா். ஆனால் அதற்கு பதில் பேப்பா் கப்களை ஒரு சரமாக வாங்கி, மரவள்ளிக்கிழங்கு குச்சியில் மூடி வைத்து மருந்து அடிப்பது செலவு குறைகின்றது,என்றாா். கோடைமழையால், விவசாய வயல்களில் களைச்செடிகள் நன்கு வளா்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.