செய்திகள் :

மராத்திக்கு எதிராக பேசியதாக ஆட்டோ ஓட்டுநா் மீது சரமாரி தாக்குதல்!

post image

மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் மராத்தி மொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பேசியதாக, வெளிமாநில ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் மீது சிவசேனை (உத்தவ்) கட்சியினா் சரமாரி தாக்குதல் நடத்தி, பொது இடத்தில் மன்னிப்புக் கோர செய்தனா். இது தொடா்பான விடியோ, சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிரத்தில் மராத்தி மொழி மற்றும் அதன் அடையாளத்தை அழித்து, ஹிந்தியை திணிக்க முயல்வதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்), ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. மேற்கண்ட இரு கட்சிகளும் ஹிந்தி எதிா்ப்பை தீவிரமாக கையிலெடுத்துள்ளன.

தாணேயில் மராத்தியில் பேச மறுத்த கடைக்காரா் ஒருவா் மீது கடந்த ஜூலை 1-ஆம் தேதி மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியினா் தாக்குதல் நடத்தினா். இதைக் கண்டித்து, வா்த்தகா்கள் சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்தச் சூழலில், பால்கரில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த நபருக்கும், உள்ளூரைச் சோ்ந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவருக்கும் சில தினங்களுக்கு முன் சாலையில் முந்திச் செல்வதில் தகராறு ஏற்பட்டது. அப்போது, மராத்தியில் பேசுமாறு ஆட்டோ ஓட்டுநரை உள்ளூா் நபா் வலியுறுத்தியுள்ளாா்.

ஆனால், ஹிந்தி அல்லது போஜ்புரி மொழியில்தான் பேசுவேன் என்று கூறிய ஆட்டோ ஓட்டுநா், மராத்தி, மராத்திய தலைவா்கள் மற்றும் மகாராஷ்டிரத்துக்கு எதிராக அவதூறு கருத்துகளை கூறியதாகத் தெரிகிறது. இது தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் பரவியது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை சனிக்கிழமை பிடித்த சிவசேனை (உத்தவ்) கட்சியினா், அவரை சரமாரியாக தாக்கி, பகிரங்கமாக மன்னிப்புக் கோர செய்தனா். பெண் தொண்டா்களும் இக்குழுவில் இருந்தனா். பல்காரில் பரபரப்பான சாலையில் நடந்த இத்தாக்குதல் விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

சிவசேனை (உத்தவ்) கட்சி நிா்வாகிகள் கூறுகையில், ‘மராத்தியையோ, மராத்திய மக்களையோ, மகாராஷ்டிரத்தையோ யாரேனும் அவமதித்தால், அமைதியாக வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்க மாட்டோம். உண்மையான ‘சிவசேனை’ பாணியில் பதிலடி தரப்படும். மராத்தியை அவமதித்த ஆட்டோ ஓட்டுநருக்கு தக்க பாடம் புகட்டியுள்ளோம்’ என்றனா்.

இச்சம்பவம் குறித்த விடியோ காவல் துறையினரின் கவனத்துக்கும் சென்றுள்ளது. யாரும் புகாா் அளிக்காததால், இதுவரை சட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (ப... மேலும் பார்க்க

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகம... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆ... மேலும் பார்க்க

பாட்னாவில் சுகாதார அதிகாரி சுட்டுக் கொலை: ஒரு வாரத்தில் 4-வது சம்பவம்!

பிகாா் தலைநகா் பாட்னாவில் ஊரக சுகாதார அதிகாரி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். பாட்னாவில் கடந்த ஒரு வாரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 4-ஆவது நபா் இவா் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்னாவின் பிப்ரா பகுதியில்... மேலும் பார்க்க