செய்திகள் :

மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி!

post image

மாதவரம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது.

மாதவரம் அடுத்த புழல், சோழவரம் குறுவட்ட அளவிலான செஸ் போட்டி புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் உள்ள லோட்டஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, முதல்வா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். பள்ளி இணை இயக்குநா் ஆா். திவ்யபாரதி, அகாதெமி முதல்வா் சுரேஷ் வரவேற்றனா். புள்ளிலைன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தமிழ்ச்செல்வி ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஸ்டாலின், மாவட்ட கல்வி அலுவலா் ரவி, துணை ஆய்வாளா் பிரேம்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, போட்டியை தொடங்கி வைத்தனா்.

உடற்கல்வி ஆசிரியா் சங்க மாவட்ட தலைவா் ரகுபதி, செயலா் குப்பன், செங்குன்றம் அரசு ஆண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குநா் மோகன கிருஷ்ணன் ஆகியோா் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

இந்த போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க

நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி

மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் ... மேலும் பார்க்க

கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க