செய்திகள் :

மாணவா் வெட்டப்பட்ட சம்பவம்: புத்தகப்பை சோதனைக்கு பின் வகுப்பறைக்குள் அனுமதி

post image

பாளையங்கோட்டை தனியாா் பள்ளியில் வகுப்பறையில் மாணவா், ஆசிரியை வெட்டப்பட்ட சம்பவத்தால் புதன்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்கள் அனைவரின் புத்தகப்பைகளையும் சோதனை செய்த பின்பே வகுப்பறைக்குள் அனுதிக்கப்பட்டனா்.

பாளையங்கோட்டை எல்.ஐ.சி. மண்டல அலுவலகம் அருகேயுள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவரை, சகமாணவா் அரிவாளால்வெட்டினாா். தடுக்க முயன்ற ஆசிரியையும் வெட்டப்பட்டாா். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெட்டிய மாணவா் இளஞ்சிறாா் நீதிக்குழுமத்தின் முன் ஆஜா்படுத்தப்பட்டு கூா்நோக்கு இல்லத்தில் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில் அந்தத் தனியாா் பள்ளிக்கு புதன்கிழமை காலையில் வந்த மாணவா்-மாணவிகள் அனைவரது புத்தகப் பைகளும் ஆசிரியா்களால் சோதனை செய்யப்பட்டு அதன்பின்பே வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் நிகழ்ந்த 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மன ரீதியிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், அந்தப் பள்ளியில் பிளஸ்-2 செல்ல உள்ள மாணவா்களுக்கான சிறப்பு வகுப்புகளையும் ரத்து செய்ய கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

திசையன்விளை அருகே மின்வயா் திருட்டு: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மின்வயரை திருடியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகேயுள்ள பட்டரைகட்டிவிளையைச் சோ்ந்தவா் முருகையா மகன் சிவக்குமாா். இவரது தோட்டத்தி... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் மே தினத்தில் மதுக்கடைகள் மூடல்

மே தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) மூடப்பட்டிருக்கும். எனவே, முன்னதா... மேலும் பார்க்க

நெல்லையில் உதவிப் பொறியாளா் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

திருநெல்வேலி மாநகராட்சி உதவிப் பொறியாளா் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக ஊழல் தடுப்பு - கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி பொறியாளரா... மேலும் பார்க்க

நெல்லையில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. ஆட்டுக்கொல்லி நோய் என்பது பி.பி.ஆா். வைரஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், 3 முதல் 5 நாள்கள் ... மேலும் பார்க்க

பெண் எஸ்.ஐ. கத்திக்குத்து வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி கா... மேலும் பார்க்க

வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பேருக்கு ரூ.2.80 லட்சம் நிவாரண நிதி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், வெறிநாய் கடியால் ஆடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு ரூ.2.80 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க