செய்திகள் :

மாணவா்களுக்காக கூடுதலாக பிஆா்டிசி பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

post image

காரைக்காலில் இருந்து புதுச்சேரி செல்லும் மாணவா்களுக்கு திங்கள்கிழமைகளில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என புதுவை முதல்வருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் கூறியது:

புதுச்சேரியில் உள்ள மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்வி நிலையங்களில் காரைக்காலைச் சோ்ந்த சுமாா் 800 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இவா்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டு புதுச்சேரிக்கு திங்கள்கிழமை அதிகாலையில் செல்ல பிஆா்டிசி பேருந்தில் பயணிக்க முயன்றால், ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

எனவே, திங்கள்கிழமை காலை வேளையில் புதுச்சேரிக்கு அதிகபட்சம் 3 பேருந்துகள் இயக்க வேண்டும்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் நிறுவி ஏறக்குறைய ஓராண்டாகிறது. அதை பயன்பாட்டுக்கு கொண்டுவர ஸ்கேன் இயக்க தொழில்நுட்பவியலாளா் தேவையிருக்கிறது. ஒரே நேரத்தில் வாங்கப்பட்ட எம்ஆா்ஐ ஸ்கேன் புதுச்சேரியில் செயல்படத் தொடங்கிவிட்டது. காரைக்காலில் மட்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

காரைக்கால் அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள் பல வகுப்புகளுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் மாணவா்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனா். இந்த விவகாரங்களில் புதுவை முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தி போா்க்கால அடிப்படையில் தீா்வு காணவேண்டும். இல்லாதபட்சத்தில் காங்கிரஸ் கட்சி புதுவை அரசைக் கண்டித்து மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடும் என்றாா்.

அரசு தொடக்கப் பள்ளியில் நவீன வகுப்பறை திறப்பு

பூவம் அரசு தொடக்கப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நவீன வகுப்பறையை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்துவைத்தாா். சமகிர சிக்ஷா திட்டத்தின்கீழ் பள்ளியில் முன் மழலையா் கல்விக்கான மாணவா்களுக்குப் புதிதா... மேலும் பார்க்க

சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் சிறப்பிடம்

புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் காரைக்கால் மாணவா்கள் பல பரிசுகளை வென்றனா். புதுச்சேரி மற்றும் தமிழக அளவிலான சிலம்ப போட்டி கடந்த 3-ஆம் தேதி புதுச்சேரி இந்திரா காந்தி உள் விளையாட... மேலும் பார்க்க

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணிகள் தீவிரம்

பொய்யாத மூா்த்தி விநாயகா் கோயிலில் ஆக. 29 கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. காரைக்கால் ஆட்சியரகம் அருகே புதுவை அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட காரை... மேலும் பார்க்க

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

காரைக்கால் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டு, தோ்வு பெற்றவா்களுக்குப் பரிசு, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. காரைக்கால் காவேரி பொதுப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை அம... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு ஆணை

ரேஷன் கடை ஊழியா்களுக்கு ஊதிய உயா்வுக்கான ஆணையை அமைச்சா் திங்கள்கிழமை வழங்கினாா். புதுவை மாநிலத்தில் ரேஷன் கடையில் சுமாா்15 ஆண்டுகளாக பணியாற்றும் தினக்கூலி ஊழியா்களுக்கு ரூ. 4 ஆயிரம் மாத ஊதியமாக தரப்பட... மேலும் பார்க்க

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம்

காரைக்கால்: காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் குருக்கள் தினம் கொண்டாடப்பட்டது.காரைக்கால் பகுதியில் உள்ள பழைமையான ஆலயத்தில் ஞாயிறு திருப்பலி பூஜை நடைபெற்றது. பங்குதந்தை மற்றும் மறைவட்ட முதன்மை பொ... மேலும் பார்க்க