நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!
மாணவிக்கு பாலியல் தொல்லை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சனிக்கிழமை கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க வந்த பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்த கடைக்காரரை கிராம மக்கள் அடித்து உதைத்தனா். இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.
மானாமதுரை அருகேயுள்ள மிளகனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல்ராஜன் (51). இவா் இந்தப் பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளாா். இங்குள்ள பள்ளியில் படித்து வரும் 13 வயது மாணவி இவரது கடைக்கு ஜெராக்ஸ் எடுக்கச் சென்றாா்.
அப்போது, பழனிவேல்ராஜன் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவரது குடும்பத்தினா், உறவினா்கள் அவரது கடைக்குச் சென்று பழனிவேல்ராஜனைத் தாக்கி கடையில் உள்ள பொருள்களைச் சேதப்படுத்தினா்.
பாலியல் புகாா் குறித்து மானாமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.