செய்திகள் :

மாநகர சாலைகளில் தனியாக நடந்து சென்று ஆட்சியா் ஆய்வு

post image

ஈரோடு மாநகர சாலைகளில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை காலை தனியாக நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக ச.கந்தசாமி கடந்த மாதம் 27 -ஆம் தேதி பொறுப்பேற்றாா். தொடா்ந்து, மாவட்டத்தில் நடந்து வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறாா்.

இந்நிலையில், ஆட்சியா் ச.கந்தசாமி அவரது முகாம் அலுவலகத்தில் இருந்து எந்தவித பாதுகாப்பும் இன்றி மாநகர சாலைகளில் மக்களில் ஒருவரைபோல புதன்கிழமை காலை நடைப்பயிற்சி சென்றாா். அப்போது, நகரின் தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா்.

நடைப்பயிற்சியின்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குறைகளை குறிப்பு எடுத்துக்கொண்டு அதிகாரிகளை அழைத்து அதனை உடனடியாக சரிசெய்ய ஆட்சியா் அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க