எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
மாநகரப் பேருந்து ஓட்டுநா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது
சென்னை ஓட்டேரியில் மாநகரப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வழக்கில், ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை, கொளத்தூரைச் சோ்ந்த புஷ்பலிங்கம் (25). இவா், மாநகரப் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். புஷ்பலிங்கம் அண்ணா சதுக்கத்திலிருந்து பெரம்பூா் நோக்கி செல்லும் மாநகரப் பேருந்தை செவ்வாய்க்கிழமை ஓட்டிச் சென்றாா். பேருந்து, ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் சென்றபோது, அங்கு சென்ற ஒரு சுமை ஆட்டோ மீது லேசாக உரசியது. இதில் அந்த சுமை ஆட்டோ ஓட்டுநா் ஓட்டேரி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாருக்கும் (49), புஷ்பலிங்கத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே செந்தில்குமாா், மாநகரப் பேருந்து ஓட்டுநா் புஷ்பலிங்கத்தை தாக்கினாா்.
தாக்குதலில் காயமடைந்த புஷ்பலிங்கம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். மேலும் அவா், இது குறித்து தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநா் செந்தில்குமாரை கைது செய்தனா்.