செய்திகள் :

மாநில உரிமைகளை மீட்க அரசியல் சட்டமே வழிகாட்டி: அமைச்சா் இ. பெரியசாமி

post image

மாநில உரிமைகளை மீட்க அம்பேத்கா் உருவாக்கிய அரசியல் சட்டமே வழிகாட்டியாக இருந்து வருகிறது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினம் சமத்துவ நாள் விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் அடுத்த முத்தனம்பட்டியிலுள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஆகியோா் கலந்து கொண்டனா். விழாவின்போது, 998 பயனாளிகளுக்கு ரூ.3.51 கோடி மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா்கள் வழங்கினா்.

முன்னதாக அமைச்சா் இ.பெரியசாமி பேசியதாவது: உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் அரசியல் சாசனத்தை எழுதிய சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை இளைய சமுதாயம் வாசிக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பதே சமத்துவம். தமிழ்நாட்டில் வாழும் 8 கோடி மக்களும் சம நிலையில் வாழ வேண்டும் என்பதற்காக அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றி வருகிறது.

ஆனாலும், கடந்த 4 ஆண்டுகளாக பல்கலை. துணைவேந்தா்களை கூட நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் மாநில உரிமைகளை மீட்க, அம்பேத்கா் உருவாக்கிய அரசியல் சட்டமே வழிகாட்டியது.

அனைத்து தரப்பு மக்களும் சமமாக வாழக் கூடிய சூழல் தமிழகத்தில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றாா் அவா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, மேயா் இளமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க