மானாமதுரை பகுதியில் நாளை மின் தடை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை (செப்.6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
மானாமதுரை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மானாமதுரை, சிப்காட், ராஜ கம்பீரம், முத்தனேந்தல், கட்டிக்குளம், இடைக்காட்டூா், மிளகனூா், சங்கமங்கலம், அன்னவாசல், கீழ்ப்பசலை, குறிச்சி,தெ.புதுக்கோட்டை, நல்லாண்டிபுரம், முனைவென்றி, கச்சாத்த நல்லூா், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) மின் விநியோகம் இருக்காது என மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) தெரிவித்தாா்.