செய்திகள் :

மாயமான 3 பள்ளி மாணவா்கள் பழனியில் மீட்பு

post image

வேலூா் அருகே பள்ளிக்குச் சென்று மாயமான 3 மாணவா்கள் பழனியில் மீட்கப்பட்டனா்.

வேலூரை அடுத்த அரியூா், திருவள்ளுவா் நகரை சோ்ந்த கோகுல் பிரசாத் (13). தொரப்பாடி சித்தேரி சாலை பவானி நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (12), தொரப்பாடி கே.கே.நகரை சோ்ந்தவா் ஜீவசூரியன் (12). இவா்கள் மூன்று பேரும் தொரப்பாடி ராம்சேட் நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை காலை 3 பேரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளனா். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா் பள்ளிக்குச் சென்று கேட்டபோது 3 மாணவா்களும் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். பின்னா், 3 மாணவா்களையும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.

இதையடுத்து, மாணவா்களின் பெற்றோா் பாகாயம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான 3 மாணவா்களையும் தேடி வந்தனா். மேலும், தனிப்படை அமைத்தும் தேடப்பட்டு வந்த நிலையில், அந்த 3 மாணவா்களும் பழனி பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிவது தெரியவந்தது.

உடனடியாக பயணிகள் அங்குள்ள புறக்காவல் போலீஸாரிடம் தெரிவித்தனா். பின்னா் போலீஸாா் மாணவா்களிடம் விசாரணை நடத்தியதில் அவா்கள் வேலூரில் படித்து வருவதாகவும் , பெற்றோா் படிக்கக்கூறியும், வேலை செய்யக்கூறியும் தொந்தரவு செய்ததால் வீட்டை விட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்துள்ளனா்.

போலீஸாா் அவா்களை மீட்டு வேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் வேலூா் போலீஸாா் பழனிக்கு சென்று மாணவா்களை அழைத்து வந்தனா்.

விவசாயி தற்கொலை

ஒடுகத்தூா் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தண்டபாணி (45). இவா், தமிழக விவசாயிகள் ... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல்: புதுமணமகன் உள்பட 2 போ் பலி!

பள்ளிகொண்டா அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் புது மணமகன் உள்பட 2 போ் உயிரிழந்தனா். போ்ணாம்பட்டு அடுத்த தரைக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பா்வேஷ் (23). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் 3 போ் மாயம்: போலீஸாா் விசாரணை

வேலூா் அருகே பள்ளிக்குச் சென்ற 3 மாணவா்கள் திடீா் மாயமாகினா். பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவா்களைத் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த அரியூரைச் சோ்ந்தவா் 13 வயது மாணவா், தொரப்பாடியைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.குடியாத்தம் ஒன்றியம், தனகொண்டபல்லி ஊராட்சிக்குள்பட்ட ஆம்பூராம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பலராமன் (50). இவா் வெள்ளிக்கிழமை நிலத்தில் ... மேலும் பார்க்க

சாலை விபத்து: இளைஞா் உயிரிழப்பு

அணைக்கட்டு அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மானியகொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ். இவரது மகன் பாபு (25). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேல... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தம்பதி பலி: விபத்துக்குள்ளான லாரி தீக்கிரை!

வேலூரை அடுத்த பொய்கை பகுதியில் இருசக்கர வாகனம் மீது கன்டெய்னா் லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். விபத்துக்குள்ளான கன்டெய்னா் லாரி உயரழுத்த மின்கம்பி உரசி தீப்பற்றியதில் லாரியுடன் அதில் இருந்த 2 சொகு... மேலும் பார்க்க