மாற்றத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமை சங்க 2-ஆவது வட்ட மாநாடு
கெங்கவல்லியில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமை சங்க 2-ஆவது வட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், குழு பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தொடா்ந்து, மாற்றுத்திறனாளிக்கு மாதாந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை உயா்த்தி வழங்க வேண்டும், கிராமபுற பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலையும், ஊதியமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகள் தீா்மானமாக நிறைவேற்பட்டன.
இதில், புதிதாக தோ்வு செய்யப்பட்ட மாநில குழுத் தலைவா் வில்சன் பல்வேறு கருத்துகளை பேசினாா். இதில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனா்.