செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்துக்கு ஆதாா் கட்டாயம்: மத்திய அரசு

post image

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பணப் பலன்களைப் பெற, பயனாளிகள் தங்கள் ஆதாா் எண்ணைச் சமா்ப்பிப்பது அல்லது ஆதாா் எண்ணுக்கு விண்ணப்பித்ததற்கான ஆதாரத்தை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஆதாா் இல்லாததாலோ அல்லது ஆதாா் அங்கீகாரம் தோல்வியுற்ாலோ எந்தத் தகுதியான பயனாளிகளுக்கும் பலன்கள் மறுக்கப்படாது என்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுதொடா்பாக கடந்த ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிக்கையின்படி, ‘போக்குவரத்துப் படி, தங்குமிடச் செலவு மற்றும் வேலைவாய்ப்புக்குப் பிந்தைய ஆதரவு உள்பட திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பணப் பலன்களைப் பெறுவதற்கு பயனாளிகளின் ஆதாா் அங்கீகாரம் அவசியமாகும்.

ஆதாா் எண் இல்லாத தகுதியான பயனாளிகள், ஆதாா் பதிவு செய்ய உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு, பெற்றோா்கள் அல்லது சட்டபூா்வ பாதுகாவலரின் ஒப்புதலுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆதாா் எண் ஒதுக்கப்படும் வரை, பிறப்புச் சான்றிதழ்கள், பள்ளி ஆவணங்கள், சட்டபூா்வ தத்தெடுப்பு/பாதுகாவலா் ஆவணங்கள் போன்ற மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தி பயனாளிகள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம்.

கைரேகை அல்லது கருவிழிப் பதிவு போன்ற பயோமெட்ரிக் ஆதாா் அங்கீகாரம் தோல்வியுற்றால், ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி)அடிப்படையிலான அங்கீகாரம், இணையவழி கேஒய்சி சரிபாா்ப்பு போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டப் பின்னணி, நோக்கம்: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் கடந்த 2015, மாா்ச்சில் தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் (என்ஏபி-எஸ்டிபி), மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக உயா்தர தொழிற்பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இத்திட்டம் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பைப் பெற்று சுயசாா்புடன் வாழ உதவும்.

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க

இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்: சுவிட்சா்லாந்து அனுமதி

இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான மிகப் பெரிய வா்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை சுவிட்சா்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இத் தகவலை இந்தி... மேலும் பார்க்க

பிகாரில் தனித்துப் போட்டி: ஆம் ஆத்மி அறிவிப்பு

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்தாா். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இ... மேலும் பார்க்க