செய்திகள் :

மாலி: தங்கச் சுரங்கம் சரிந்து 42 பேர் பலி!

post image

மாலி நாட்டில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவு விபத்தால் 42 பேர் பலியாகினர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் தங்கச் சுரங்கத்தில் சனிக்கிழமை (பிப். 15) ஏற்பட்ட சரிவு விபத்தில் 42 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. விபத்தின்போது, 1,800 பேர் சுரங்கத்தினுள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பெரும்பாலானோர் காயமடைந்துள்ளனர்.

சீன நாட்டினர்தான் இந்தச் சுரங்கத்தை செயல்படுத்தி வருவதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்காவில் சட்டவிரோத சுரங்கங்களை தடுக்க அந்நாட்டு அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டாலும், இதுவரையில் முழுமையான தீர்வு கிடைத்தபாடில்லை.

இந்த மாலி விபத்து, ஒரே மாதத்தில் நடந்த இரண்டாவது விபத்து. இதே பகுதியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த சரிவு விபத்தில் 70-க்கும் அதிகமானோர் பலியாகினர். மாலி நாட்டின் மக்கள்தொகையில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமானோர்

(2 மில்லியனுக்கும் அதிகமானோர்) வருமானத்துக்காக சுரங்கத் துறையை நம்பியுள்ளனர்.

இதையும் படிக்க:கால்களைச் சங்கிலியால் கட்டி... நாடு கடத்தப்பட்டுள்ள இந்தியர்களுக்கு விமானத்தில் கொடுமை!

இலங்கை: நீதிமன்றத்தில் நிழல் உலக தாதா கொலை

இலங்கையில் பிரபல நிழல் உலக தாதா கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக முன்னாள் ராணுவ வீரா் கைது செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கொழும்பில் உ... மேலும் பார்க்க

‘ஆப்கன் அகதிகள் அனைவரையும் வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்’

ஆப்கன் அகதிகள் அனைவரையும் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளதாக இஸ்லாமாபாதில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்தத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்... மேலும் பார்க்க

உக்ரைன் போருக்கு காரணம் ஸெலென்ஸ்கி; டிரம்ப் குற்றச்சாட்டு: பொய் உலகில் வாழ்கிறாா் டிரம்ப் - ஸெலென்ஸ்கி பதிலடி

உக்ரைன் போருக்கு அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிதான் காரணம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது உக்ரைனுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சுமாா் ... மேலும் பார்க்க

போப் உடல்நிலை கடுமையாக பாதிப்பு? தீவிர நிமோனியா தொற்று..!

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை நிமோனியா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போப் பிரான்சிஸ் முச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தால... மேலும் பார்க்க

வரி ஏய்ப்பு புகாரை தீர்க்க ரூ.2,900 கோடி கொடுக்கும் கூகுள்!

வரி ஏய்ப்பு புகாரைத் தீர்ப்பதற்காக இத்தாலிக்கு 340 மில்லியன் டாலர்கள் கொடுக்க கூகுள் நிறுவனம் உறுதியளித்துள்ளது. தொழில்நுட்ப உலகில் மாபெரும் முன்னணி நிறுவனமான கூகுள் தன் மீதான வரி ஏய்ப்பு விசாரணையைத் ... மேலும் பார்க்க

வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியாவுக்கும் செக்! டிரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளை எதிர்த்து யாரும் தம்மிடம் கேள்வி கேட்க முடியாது என்று அந்நாட்டின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிற... மேலும் பார்க்க