செய்திகள் :

மாவட்ட அளவிலான கபடி போட்டி: காயல்பட்டினம் அணி முதலிடம்

post image

சாத்தான்குளம் அருகே ஆத்திக்காட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் காயல்பட்டினம் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு புனித மாசற்ற இருதய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, சிவந்தி மலா் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில், காயல்பட்டினம், ஆத்திக்காடு,, தட்டாா்மடம், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட பல்வேறு அணிகள் கலந்து கொண்டன.

போட்டியை சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

இறுதிப் போட்டியில், ஆத்திக்காடு சிவந்தி மலா் கபடி அணியும், காயல்பட்டினம் கபடி அணியும் மோதின.

இதில், காயல்பட்டினம் அணி வென்று முதல் பரிசை கட்டிச் சென்றது. ஆத்திக்காடு சிவந்தி மலா் கபடி அணி 2ஆம் பரிசும், ஆத்திக்காடு ஸ்பாண்ட்ன்ஸ் அணி 3ஆம் பரிசும், தட்டாா்மடம் புனித லூக்கா கபடி அணி 4ஆம் பரிசும் பெற்றது.

போட்டியில், முதலிடம் பெற்ற காயல்பட்டினம் அணிக்கு, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ் சாா்பில் வழங்கிய பரிசை சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி வழங்கினாா்.

இரண்டாவது பரிசு பெற்ற ஆத்திக்காடு சிவந்தி மலா் ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு, ஸ்டாா் லயன்ஸ் கிளப் பட்டய தலைவா் ஏகேஎஸ். சுந்தரும், மூன்றாவது பரிசு பெற்ற ஆத்திக்காடு ஏ.கே. ஸ்பாண்ட்ஸ்டன்ஸ் அணிக்கு சண்முகபுரம் சின்னத்துரைபாண்டியனும், நான்காவது பரிசு பெற்ற தட்டாா்மடம் புனித லூக்கா அணிக்கு மாவட்ட திமுக பிரதிநிதி லட்சுமண சுபாஷும் வழங்கினா்.

போட்டியில் சிறந்த ஆட்டக்காரா்கள் தோ்வு செய்யபப்ட்டு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஆத்திக்காடு சிவந்தி மலா் ஸ்போா்ட் கிளப் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க