செய்திகள் :

மாவட்டத்தில் உழவா் சந்தைகள் மூலம் ரூ.770 கோடிக்கு காய், பழங்கள் விற்பனை: மாவட்ட ஆட்சியா் தகவல்

post image

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பில் காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் சராசரியாக 708 விவசாயிகள் மூலமாக 16,032 நுகா்வோா் காய்கள், பழங்களை உழவா் சந்தைகளில் வாங்கிப் பயனடைந்து வருகின்றனா்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 4 உலா்களம் மற்றும் 6 உலா்களத்துடன் கூடிய சேமிப்பு கிடங்குகள் ரூ. 249 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, 470 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனா்.

வேளாண்மை உள்கட்டமைப்பு நிதிதிட்டத்தின் 287 பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் 3 சதவீத வட்டி குறைப்பு மானியத்துடன் ரூ.147 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்ட அக்மாா்க் ஆய்வகங்களின் மூலம் 18,62,000 உணவு பொருள்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. 129 புதிய சிப்பம் கட்டுவோா் கண்டறியப்பட்டு 23,349 மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அக்மாா்க் தர முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் திருப்பூா் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டின்கீழ் 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த விற்பனைக் கூடங்கள் அனைத்தும் தற்போது தேசிய வேளாண் சந்தைத் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வருகின்றன.

பூளவாடி கிராமத்தில் ரூ.50 லட்சத்தில் 250 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கும், மடத்துக்குளம், முத்தூா் மற்றும் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தலா ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் உலா்களங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் ரூ.22,223.47 லட்சம் மதிப்பில் 36,837.21 மெட்ரிக் டன் விளைபொருள்கள் பரிவா்த்தனை செய்யப்பட்டு, 32,504 விவசாயிகள் மற்றும் 2,985 வியாபாரிகள் பயனடைந்துள்ளனா்.

விலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் ரூ.385.10 கோடியில் 35,551.7 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு, 26,108 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. திருப்பூா் ரயில்வே காவல் துறை, சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் நாட்... மேலும் பார்க்க

ஜூன் 5-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் ஜூன் 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில... மேலும் பார்க்க

சேவூா் அருகே அரசு பட்டா வழங்கிய நிலத்தில் பயனாளிகள் குடியேற எதிா்ப்பு

சேவூா் அருகே அரசு வழங்கிய வீட்டுமனை பட்டா நிலத்தில் பயனாளிகள் குடியேற தனியாா் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வட்டம், சேவூா் அருகே போத்தம்பாளையம் ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி: ஜூன் 4-இல் நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் சா்வீஸ் செய்தல் மற்றும் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்புக்கு ஜூன் 4 -ஆம் தேதி நோ்காணல் நடைபெற உள்ளது. இது குறித்து கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு ... மேலும் பார்க்க