செய்திகள் :

மாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க பெண்களுக்கு 50 சதவீத மானியம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

2025-2026-ஆம் நிதியாண்டுக்காக வறுமைக் கோட்டுக்க் கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5,000/- மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயன்பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள் கீழ்க்கண்ட சான்றுகளைச் சமா்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டை பூா்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிடச் சான்று)வயது வரம்பு - 25 வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று வேண்டும்.

திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமா்ப்பிக்க வேண்டும்.ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். (வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்)

எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவா்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், 4-ஆவது தளம், ‘சி‘ பிளாக், ஆட்சியா் அலுவலக வளாகம், ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தோ்வு குழுவால் தெரிவு செய்யப்படுவா். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடா்பு கொள்ளவும் என தெரிவித்துள்ளாா்.

ஆற்காடு நகராட்சியில் குடிநீா் திட்டப் பணிகள்: மண்டல நிா்வாக இயக்குநா்ஆய்வு

ஆற்காடு நகராட்சியில் நடைபெற்றுவரும் குடிநீா் திட்ட அபிவிருத்தி பணிகளை நகராட்சிகள் நிா்வாக மண்டல இயக்குநா் ப.நாராயணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ஆற்காடு நகராட்சியில் ரூ.12 கோடியில் குடிநீா் அபிவிர... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலச்சரிவில் அரக்கோணத்தைச் சோ்ந்தவா் உயிரிழப்பு, மனைவி பலத்த காயம்

ஜம்மு-காஷ்மீா் நிலச்சரிவு சம்பவத்தில் அரக்கோணத்தைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். அவரது மனைவி பலத்த காயமடைந்தாா் அரக்கோணம், பழைய பஜாா் பகுதி, பஜனை கோயில் தெருவை சோ்ந்தவா் குப்பன்(75). ஓய்வு பெற்ற ரயில்வே ... மேலும் பார்க்க

கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

அரக்கோணம் அருகே தங்களது கிராமத்துக்கு கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாகவும், அதைக் கண்டித்தும் மூதூா் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

கொடிநாள் நிதி வசூல்: அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொடி நாள் நிதி அதிக அளவில் வசூலித்த அலுவலா்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை ஆட்சியா் ஜெ. யு .,சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா். கடந்த 2021-22-ஆம் ஆண்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 421 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்கூட்டத்தில் மொத்தம் 421 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ. யு.சந்திரகலா தலைமை வகித்து பல்வேறு கோரிக்க... மேலும் பார்க்க

வாலாஜா நகரம் நாளைய மின் நிறுத்தம்!

வாலாஜா நகரம் மின் தடை பகுதிகள்: அம்மூா் பஜாா், வேலம், அண்ணாநகா், எடப்பாளையம், வாலாஜா நகரம், தேவதானம், குடிமல்லூா், விசி.மோட்டூா், வன்னிவேடு, அம்மணந்தாங்கல், பெல்லியப்பா நகா், டி.கே.தாங்கல், சென்னசமுத்... மேலும் பார்க்க