ராகிங்கை தடுக்க கண்காணிப்பு கேமரா, 7 பேர் குழு: அமைச்சர் கோ.வி.செழியன்
மாா்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது
மாா்த்தாண்டம் அருகே பைக்கில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா் இந்துசூடன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.
அப்போது, அப்பகுதியில் பைக்கில் சந்தேகப்படும் வகையில் நின்ற இளைஞரை பிடித்து சோதனையிட்டனா். இதில், சிறு, சிறு பொட்டலமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவா் மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் விஷ்ணு (21) என்பது தெரியவந்தது. மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஷ்ணுவை கைது செய்தனா். பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.