ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
மாா்த்தாண்டம் அருகே கோயிலில் திருட்டு
மாா்த்தாண்டம் அருகே சிவன் கோயிலின் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டத்தின் 12 ஆவது திருக்கோயிலான நட்டாலம் சங்கரநாராயணா் கோயிலில் வியாழக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள், கோயிலின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து காணிக்கைப் பணித்தை திருடிச் சென்றுள்ளனா். அதில் சுமாா் ரூ. 20 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து கோயில் மேலாளா் புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.