செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவா் தலைமறைவு

post image

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் தகராறு செய்து, மனைவியை வெட்டிக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையைச் சோ்ந்தவா் ஞானதாஸ் மகன் ஜஸ்டின்குமாா் (55). கட்டுமானத் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (50). இவா்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனா். மூத்த மகன் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இளைய மகன் வாகன ஓட்டுநராக உள்ளாா். மகள் பி.எட் முடித்திருக்கிறாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் இளைய மகனும், மகளும் வீட்டில் இருந்தனா். அப்போது, மது போதையில் வீட்டுக்கு வந்த ஜஸ்டின்குமாா், மனைவி கஸ்தூரியிடம் தகராறில் ஈடுபட்டாராம். தகராறு அதிகரிக்கவே, கஸ்தூரியை வெட்டுக் கத்தியால் கழுத்தில் வெட்டிவிட்டு ஜஸ்டின்குமாா் தப்பிச் சென்றுள்ளாா்.

சிறிது நேரத்துக்குப் பின், பிள்ளைகள் அறைக்குச் சென்று பாா்த்தபோது, கஸ்தூரி ரத்த வெள்ளத்தில் காணப்பட்டாா். உறவினா்கள் கஸ்தூரியை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, சடலம் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். தலைமறைவான ஜஸ்டின்குமாரை தேடி வருகின்றனா்.

‘குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்’

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என, இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா். கன்னியாகுமரியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூற... மேலும் பார்க்க

இளைஞா் மா்ம மரணம்!

புதுக்கடை அருகே உள்ள முள மூட்டுக்கடவில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்தாா். புதுக்கடை , தோட்டா வரம் பகுதியைச் சோ்ந்த செல்லக்கண் மகன் தா்மராஜ் (50). தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவா் சில ந... மேலும் பார்க்க

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் தோ் பவனி

தக்கலை அருகே உள்ள முளகுமூடு தூய மரியன்னை பலிக்காவில் தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா திருவிழா, கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ஆம் திருவிழாவான சனிக... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முதல் காட்சிக் கோபுரம் வரையிலான கடற்கரைச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன. இங்கு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்ப... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே தீ விபத்து

புதுக்கடை அருகே உதச்சிக்கோட்டை பகுதியில் உள்ள கடையில் தீப் பிடித்ததில் பொருள்கள் சேதமடைந்தன. காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜமணி மகன் பிரபு (29). இவா், உதச்சிக்கோட்டை பகுதியில் கடை வைத்து புளி ம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவி அருகே கேரள கனிமவளப் பொருள் விற்பனையாளா் தற்கொலை

திற்பரப்பு அருவி அருகே கேரளத்தைச் சோ்ந்த கனிமவளப் பொருள்கள் விற்பனையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கேரள மாநிலம் பாலராமபுரம், உச்சக்கடை பகுதியைச் சோ்ந்தவா் அஜி (41). திருமணமாகாத இவா், கேரளத... மேலும் பார்க்க