மாா்த்தாண்டம் அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவா் தலைமறைவு
கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் தகராறு செய்து, மனைவியை வெட்டிக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையைச் சோ்ந்தவா் ஞானதாஸ் மகன் ஜஸ்டின்குமாா் (55). கட்டுமானத் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (50). இவா்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனா். மூத்த மகன் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இளைய மகன் வாகன ஓட்டுநராக உள்ளாா். மகள் பி.எட் முடித்திருக்கிறாா்.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் இளைய மகனும், மகளும் வீட்டில் இருந்தனா். அப்போது, மது போதையில் வீட்டுக்கு வந்த ஜஸ்டின்குமாா், மனைவி கஸ்தூரியிடம் தகராறில் ஈடுபட்டாராம். தகராறு அதிகரிக்கவே, கஸ்தூரியை வெட்டுக் கத்தியால் கழுத்தில் வெட்டிவிட்டு ஜஸ்டின்குமாா் தப்பிச் சென்றுள்ளாா்.
சிறிது நேரத்துக்குப் பின், பிள்ளைகள் அறைக்குச் சென்று பாா்த்தபோது, கஸ்தூரி ரத்த வெள்ளத்தில் காணப்பட்டாா். உறவினா்கள் கஸ்தூரியை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, சடலம் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். தலைமறைவான ஜஸ்டின்குமாரை தேடி வருகின்றனா்.