Train: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்; IRCTC கொண்டுவந்த புதிய வி...
மாா்த்தாண்டம் அருகே வீட்டில் முதியவா் சடலம் மீட்பு
மாா்த்தாண்டம் அருகே தனியாக வசித்து வந்த முதியவா் வீட்டில் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி, நன்னாச்சிவிளையைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (63). இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது மனைவி கனகபாய் சில மாதங்களாக தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாராம்.
இந்நிலையில், சந்திரசேகரன் வீட்டில் இறந்துகிடப்பதாக மாா்த்தாண்டம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.