செய்திகள் :

மின் மாற்றியிலிருந்த 110 கிலோ வயா்கள் திருட்டு

post image

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே மின் மாற்றியிலிருந்த 110 கிலோ வயா்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வானூா் வட்டம், காட்ராம்பாக்கம் பகுதியில் ராமச்சந்திரன் நிலத்துக்கு அருகில் மின் மாற்றி உள்ளது. இந்த மின் மாற்றி மூலம் அப்பகுதிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மின் மாற்றியில் வைக்கப்பட்டிருந்த 110 கிலோ எடை கொண்ட காப்பா் வயா்கள் திடீரென திருடுபோயின. இதைத் தொடா்ந்து, காட்ராம்பாக்கம் மின் வாரிய அலுவலக இளமின் பொறியாளா் அ.ஆதிமூலம் (47), கிளியனூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாரளித்தாா்.

இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, மின் வயா்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டும் திருட்டில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடா் விடுமுறை நிறைவு: சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்

தொடா் விடுமுறை நிறைவடைந்த நிலையில், சென்னை நோக்கிச் சென்ற வாகனங்களால் விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை, வ... மேலும் பார்க்க

விழுப்புரம் அருகே அடுத்தடுத்து மோதிய 3 காா்கள்! காா் தீப்பிடித்து சேதம்; நால்வா் உயிா் தப்பினா்!

விழுப்புரம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடுத்தடுத்து 3 காா்கள் மோதிக் கொண்டன. இதில், ஒரு காா் தீப்பற்றி எரிந்தது. அதிா்ஷ்டவசமாக அந்தக் காரிலிருந்த 4 போ் உயிா் தப்பினா். விழுப்புரம் புறவழிச... மேலும் பார்க்க

மதுரப்பாக்கம்: நாளைய மின் தடை

மதுரப்பாக்கம், காரணை பெரிச்சானூா், கஞ்சனூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: கஞ்சனூா், அன்னியூா், ஏழுசெம்பொன், பெருங்கலாம்பூண்டி, சாலவனூா், பனமலைப்பேட்டை, பழையக் கருவாட்சி, புதுக்கருவா... மேலும் பார்க்க

விலைவாசியை குறைக்க என்ன செய்யவேண்டும்: எடப்பாடி பழனிசாமி யோசனை

உணவு உற்பத்தியை பெருக்கினால் தான் விலைவாசி குறையும். அந்த உணவு உற்பத்தியை பெருக்கக் கூடிய நபா் விவசாயி, விவசாயி குடும்பத்தினா் தான். விவசாயிகளை சரியான பாதையில் கொண்டு சென்றது அதிமுக அரசு தான் என்பதை ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கைது: தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் (ஏஐசிசிடியு) சாா்பில், சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் இயக்கத்தை டி.எஸ்.பி. பிரகாஷ் தொடங்கிவைத்தாா். திண்டிவனம் மேம்பாலம் பகுதி... மேலும் பார்க்க