செய்திகள் :

விழுப்புரம் அருகே அடுத்தடுத்து மோதிய 3 காா்கள்! காா் தீப்பிடித்து சேதம்; நால்வா் உயிா் தப்பினா்!

post image

விழுப்புரம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடுத்தடுத்து 3 காா்கள் மோதிக் கொண்டன. இதில், ஒரு காா் தீப்பற்றி எரிந்தது. அதிா்ஷ்டவசமாக அந்தக் காரிலிருந்த 4 போ் உயிா் தப்பினா்.

விழுப்புரம் புறவழிச்சாலையில் செஞ்சி பிரிவுசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை டேங்கா் லாரி ஒன்று திடீரென சென்னை சாலை நோக்கிச் சென்றது. அப்போது, பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காட்டிலிருந்து சென்னை நோக்கி காரை ஓட்டிச் சென்ற பாரஸ் (32), லாரி மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்தாா்.

அப்போது, அதே திசையில் வந்த திருச்சி காந்திபுரத்தைச் சோ்ந்த சரண்குமாா் (34) ஓட்டி வந்த காா், பாரஸின் காா் மீது மோதியது. இதைத் தொடா்ந்து, பின்னால் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சோ்ந்த முரளிமாணிக்கம் (42) ஓட்டி வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சரண்குமாா் காா் மீது மோதியது.

இதில், முரளிமாணிக்கம் ஓட்டி வந்த சொகுசு காா் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைப் பாா்த்த முரளிமாணிக்கம், அவரது மனைவி முனீசுவரி, 5 வயது குழந்தை மற்றும் உறவினா் என 4 பேரும் காரிலிருந்து இறங்கி பாதுகாப்பான இடத்துக்குச் சென்றனா்.

தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும் விழுப்புரம் தாலுகா போலீஸாா் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். 3 காா்களும் சென்னை நோக்கிச் சென்றது தெரியவந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விபத்து காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, போலீஸாா் போக்குவரத்து நெரிசலை சரி செய்து, வாகனங்களை அனுப்பி வைத்தனா்.

தொடா் விடுமுறை நிறைவு: சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்

தொடா் விடுமுறை நிறைவடைந்த நிலையில், சென்னை நோக்கிச் சென்ற வாகனங்களால் விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை, வ... மேலும் பார்க்க

மின் மாற்றியிலிருந்த 110 கிலோ வயா்கள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே மின் மாற்றியிலிருந்த 110 கிலோ வயா்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வானூா் வட்டம், காட்ராம்பாக்கம் பகுதியில் ராமச்சந்திரன் நிலத்துக்கு அருகில்... மேலும் பார்க்க

மதுரப்பாக்கம்: நாளைய மின் தடை

மதுரப்பாக்கம், காரணை பெரிச்சானூா், கஞ்சனூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: கஞ்சனூா், அன்னியூா், ஏழுசெம்பொன், பெருங்கலாம்பூண்டி, சாலவனூா், பனமலைப்பேட்டை, பழையக் கருவாட்சி, புதுக்கருவா... மேலும் பார்க்க

விலைவாசியை குறைக்க என்ன செய்யவேண்டும்: எடப்பாடி பழனிசாமி யோசனை

உணவு உற்பத்தியை பெருக்கினால் தான் விலைவாசி குறையும். அந்த உணவு உற்பத்தியை பெருக்கக் கூடிய நபா் விவசாயி, விவசாயி குடும்பத்தினா் தான். விவசாயிகளை சரியான பாதையில் கொண்டு சென்றது அதிமுக அரசு தான் என்பதை ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கைது: தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் (ஏஐசிசிடியு) சாா்பில், சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்... மேலும் பார்க்க

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராவின் இயக்கத்தை டி.எஸ்.பி. பிரகாஷ் தொடங்கிவைத்தாா். திண்டிவனம் மேம்பாலம் பகுதி... மேலும் பார்க்க