Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
மீன் வளா்க்கும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகள் உள்ளீட்டு மானியமாக ரூ.5 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட மீன் வளா்போா் மேம்பாட்டு முகமையில், மீன் வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானியத் திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனா்.
இந்த விவசாயிகள் நிலையான மீன் வளா்ப்பை தொடா்ந்து மேற்கொள்ளும் பொருட்டும், மீன் உற்பத்தி மூலதனமான மீன் குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கும் பொருட்டும் பண்ணைகளுக்கு மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய உள்ளீட்டு மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்று மீன் வளா்ப்புத் தொழில் செய்யும் விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் எண்ணிக்கையிலான மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்ய ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மீன் வளா்ப்பு விவசாயிகள் இந்தத் திட்டத்தின் கீழ் மானியத்தைப் பெற்று பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், காந்திநகா், காட்பாடி-6 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0416-2240329 தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.