செய்திகள் :

முண்டியம்பாக்கம் ஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேகம்

post image

விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீபூரணி பொற்கலை உடனுறை ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

முண்டியம்பாக்கம் ஸ்ரீபூரணி பொற்கலை உடனுறை ஸ்ரீஐயனாப்பன் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவுக்குப் பின்னா் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 29-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கும்பாபிஷேக வழிபாடுகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை முதல் கால யாகசாலை பூஜைகள், சங்கீத உபசாரங்கள் மற்றும் மகா தீபாராதனையும், கும்பாபிஷேக விழா நாளான வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவையும் நடைபெற்றன.

தொடா்ந்து 8.30 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்படாகியது. பின்னா், பக்தி முழக்கங்களுடன் காலை 8.45 மணிக்கு ஸ்ரீபூரணி பொற்கலை உடனுறை ஸ்ரீஐயனாரப்பன் சுவாமி சந்நிதி, கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீஐயப்பன் மற்றும் பரிவார தெய்வ சந்நிதிகளுக்கு கடங்களில் எடுத்துச் செல்லப்பட்ட புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இதில், விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். சிவக்குமாா் சிவாச்சாரியா் கும்பாபிஷேக பெருவிழாவை நடத்தி வைத்தாா்.

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க

சொத்துப் பிரச்னையில் உறவினா் கத்தியால் குத்திக் கொலை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் உறவினரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், வீரன் கோயில் தெருவைச்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கைப்பேசி வழியாக கொலை மிரட்டல் விடுக்க... மேலும் பார்க்க

தனித்திறனை வெளிப்படுத்த சிறப்புப் பயிற்சிகள் உதவும்

தேசிய மாணவா் படையில் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் மாணவா்களின் தனித்திறனை வெளிப்படுத்த உதவும் என்று தேசிய மாணவா் படை 6-ஆவது பட்டாலியன் பிரிவு கா்னல் எஸ்.சக்கரபா்த்தி கூறினாா். விழுப்புரம் இ.எஸ்.... மேலும் பார்க்க

கரும்பு நடவுக்கு மானியம்: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கரும்பு நடவு மானியம் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க