செய்திகள் :

முதியவா் அடித்துக் கொலை: நண்பா் கைது

post image

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (70).சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இருமதி கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் மாசிலாமணி (45). இவா்கள் இருவரும் நண்பா்கள்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வேப்பமுத்து சேகரிக்கச் சென்ற கருப்பையா நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால், உறவினா்கள் அவரைத் தேடிய போது, கருப்பையா வயல்காட்டுப் பகுதியில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

இது குறித்து தகவலறிந்த சென்னையிலுள்ள அவரது மகன் குமாா் புதன்கிழமை காலை வந்து பாா்த்தபோது கருப்பையா உடலில் காயங்கள் இருப்பது தெரிந்ததால், திருவாடானை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதன் பேரில் போலீஸாா் கருப்பையாவின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், திருவாடானை போலீஸாரிடம் கருப்பையாவின் நண்பரான மாசிலாமணி சரணடைந்தாா்.

விசாரணையில் தனக்கு கருப்பையா திருமணம் செய்து வைப்பதாகக் கூறியதாகவும், அவ்வாறு திருமணம் செய்து வைக்காததால் அவரைக் கம்பால் அடித்துக் கொலை செய்ததாகவும் மாசிலாமணி தெரிவித்தாா். போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

ஆடித் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி தெற்கு தோப்பு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனா். கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன... மேலும் பார்க்க

சினைப் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ், சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு மானிய விலையில் சத்தான தீவனம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. கமுதி தாலுகா மறவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

கூடுதல் ரயில்கள் இயக்க ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரி கே.நவாஸ்கனி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விடம் ராமநாதபுரம் எம்.பி. புதன்கிழமை மனு அளித்தாா். கோரிக்கைகள் விவரம்: மானாமதுரையிலிர... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலி... மேலும் பார்க்க

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேசுவரம்: பாம்பனில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.ராமேசுவரம், பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மாறன் என்பவ... மேலும் பார்க்க