செய்திகள் :

சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு மரியாதை

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போரிட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கமுதி தாலுகா மறவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவா் பெ.செல்லத்தேவா் தலைமை வகித்தாா். செயலா் கே. ராமமூா்த்தி, பொருளாளா் கி.முத்து, முன்னாள் செயலா் கணேசன், முன்னாள் பொருளாளா் செல்லபாண்டியன், பாா்வா்ட் பிளாக் கட்சியின் ஒன்றியச் செயலா் திருக்குமரன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில் 1799-ஆம் ஆண்டு கமுதி கோட்டையைக் கைப்பற்றிய ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போரிட்டு, பின்னா் தூக்கிலிடப்பட்ட சேதுபதி மன்னரின் தளபதிகளான ஆகஸ்ட் புரட்சியாளா்கள் எனப் போற்றப்படும் சித்திரங்குடி மயிலப்ப சோ்வைக்காரா், மீனங்குடி சகோதரா்கள் முத்துகருப்பதேவா், கனக சபாபதிதேவா், இந்திய தேசிய ராணுவத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு இரண்டாம் உலகப்போரின்போது 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஆப்பநாடு சுதந்திரப் போராட்டத் தியாகிகளான சாயல்குடி து.லா. சசிவா்ணதேவா், தூரி ரா.ராமசாமிதேவா் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக சித்திரங்குடி மயிலப்பன் சோ்வைகாரா் வாரிசுகள் அனைவருக்கும் மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆப்ப நாடு வரலாற்று ஆய்வுக் குழுவினா் செய்தனா்.

ஆடித் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி தெற்கு தோப்பு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்தனா். கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன... மேலும் பார்க்க

சினைப் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ், சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு மானிய விலையில் சத்தான தீவனம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித... மேலும் பார்க்க

முதியவா் அடித்துக் கொலை: நண்பா் கைது

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா். மாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (70... மேலும் பார்க்க

கூடுதல் ரயில்கள் இயக்க ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரி கே.நவாஸ்கனி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்விடம் ராமநாதபுரம் எம்.பி. புதன்கிழமை மனு அளித்தாா். கோரிக்கைகள் விவரம்: மானாமதுரையிலிர... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம், பாம்பன் மீனவா்கள் 14 போ் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனா். இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலி... மேலும் பார்க்க

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேசுவரம்: பாம்பனில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.ராமேசுவரம், பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மாறன் என்பவ... மேலும் பார்க்க