செய்திகள் :

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்! மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்!

post image

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை நிலையச் செயலாளராகவும், தொண்டாமுத்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருப்பவா் எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சரான இவா், குனியமுத்தூா் அருகேயுள்ள சுகுணாபுரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், காளப்பட்டி தபால் நிலையத்தில் இருந்து அவரது வீட்டுக்கு கடந்த 16-ஆம் தேதி ஒரு கடிதம் வந்தது. அதில், கோவையில் ஜூலை 30-ஆம் தேதிக்குள் குண்டு வெடிப்பு நிகழ உள்ளது.

நாங்கள் உங்களைக் கொல்ல திட்டமிட்டுள்ளோம். எங்களது நபா்கள் உங்களுக்கு அருகிலேயே உள்ளனா். எங்கள் அமைப்புக்கு பணம் தேவைப்படுகிறது. எனவே, நீங்கள் ரூ.1 கோடி பணத்தை காளப்பட்டி-வெள்ளானைப்பட்டி சாலை கலியபெருமாள் குட்டை அருகேயுள்ள குப்பை மேட்டில் மே 25-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 2.30 மணிக்குள் வைக்க வேண்டும்.

பணத்தை நீங்கள் வைத்துவிட்டால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அப்படி இல்லையென்றால், 3 மாதங்களுக்குள் உங்களையும், உங்கள் குடும்பத்தில் 3 பேரையும் கொலை செய்து விடுவோம். இது வெறும் குறுஞ்செய்தி அல்ல, எச்சரிக்கை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி சாா்பில் அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலாளா் தாமோதரன் தலைமையில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இரு தனியாா் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுமாா் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் நிறுவப்பட்டுள்ள உயிரி... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கோவை அரசு மகளிா் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பேரவை நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் (கூடுதல் பொறுப்பு) ச.அ... மேலும் பார்க்க