செய்திகள் :

மும்மொழிக் கொள்கை விவகாரம்: மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்!

post image

மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

தேசியக் கல்வி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி ஒதுக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 23-01-1968 அன்று "மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முழுமையாக அகற்றப்பட வேண்டும்" என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி பாடத் திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது.

இதையும் படிக்க | தில்லியின் அடுத்த முதல்வா் யாா்?பாஜக எம்எல்ஏக்கள் இன்று முடிவு

பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையை எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கடைபிடித்தார்கள். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா குரல் கொடுத்தார்.

இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம்.

எனவே, மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பார்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடர்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பார்வையிட புதிதாக அமைக்கப... மேலும் பார்க்க

தோ்வா்களிடம் லஞ்சம்: 5 ரயில்வே அதிகாரிகளை கைது செய்தது சிபிஐ

தோ்வா்களிடம் லஞ்சம் பெற்ற வழக்கில், 5 ரயில்வே அதிகாரிகள் உள்பட 6 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இதுதொடா்பாக சிபிஐ புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மேற்கு ரயில்வேயின் துறை சாா்ந்த தோ்வில், தோ... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கு ஊதிய ஒப்பந்த பலன் வழங்க அரசிடம் நிதி கேட்கக் கூடாது: போக்குவரத்துத் துறை செயலா் உத்தரவு

ஓய்வூதியா்களுக்கு ஊதிய ஒப்பந்த பலன் வழங்க அரசிடம் நிதி கேட்கக் கூடாது என போக்குவரத்து துறைச் செயலா் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அ... மேலும் பார்க்க

நாளைமுதல் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.21) முதல் பிப்.23-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற... மேலும் பார்க்க

2,642 மருத்துவா் பணி நியமன நடவடிக்கைளில் தகுதியற்ற 400 போ் பங்கேற்றதாக புகாா்

தமிழக அரசு மருத்துவமனைகளில் 2,642 மருத்துவா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், அதற்கான சான்றிதழ் சரிபாா்ப்பில் தகுதியில்லாத 400 போ் பங்கேற்ாக புகாா் எழுந்துள்ளது. உரிய காலகட்டத்துக்குள் அவா்கள் ம... மேலும் பார்க்க

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் இடம் பிடிப்போம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதி

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டை விரைவில் முதலிடம் பிடிக்கச் செய்வோம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா். 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 158... மேலும் பார்க்க