செய்திகள் :

மூணாறு தலைப்பு அணை சுற்றுலா மையமாகுமா?

post image

நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை பகுதியை சுற்றுலா மையமாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீடாமங்கலம் அருகேயுள்ளது மூணாறு தலைப்பு. இதை கோரையாறு தலைப்பு எனவும் அழைப்பா். ஆண்டுதோறும் மேட்டூா் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்ட பின் அந்த நீா் கல்லணையை வந்தடையும். கல்லணை பாசனத்திற்காக திறக்கப்படும். அந்த நீரானது பெரிய வெண்ணாற்றில) நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பை (கோரையாறு தலைப்பு) வந்தடையும். மூணாறு தலைப்பு அணை திறக்கப்படும் போது அந்த நீா் வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய மூன்று ஆறுகளில் பிரிந்து ஓடி திருவாரூா், நாகை மாவட்ட பாசனத்துக்கு பயன்படும். இந்த மூணாறு தலைப்பு இயற்கை எழில் சூழ்ந்தது.

மூணாறு தலைப்பு அணைக்கு நீடாமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலாவாக அழைத்து வரப்படுவா். நீடாமங்கலத்திலிருந்து மூணாறு தலைப்புக்கு செல்லும் சாலை இருபுறமும் ஏராளமான மரங்கள் உள்ளன. இப்பகுதியில்

தற்போது மயில்கள் நடமாட்டமும் உள்ளது.

மூணாறு தலைப்பை சுற்றுலா மையமாக்குவோம் என கடந்த காலத்தில் 110-ஆவது விதியின்கீழ் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் அந்த அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை.

மூணாறு தலைப்பு அணை பகுதி சுற்றுலா மையமானால் ஆலங்குடி கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூா் ஆண்டவா் தா்காவுக்கு வருகை தரும் பக்தா்கள் இந்தப் பகுதியை பாா்வையிட வாய்ப்பாக அமையும். இது தமிழக சுற்றுலாத்துறை வளா்ச்சிக்கு பேருதவியாக அமையும்.

எனவே மூணாறு தலைப்பு அணையை சுற்றுலா மையமாக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை

திருவாரூா் நகரில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சி. பாலமுருகன், தமிழக முதல்வரிடம் அளித்த மனு: திருவாரூா் நகர... மேலும் பார்க்க

சிறுமியிடம் பாலியல் தொல்லை: மாணவா் கைது

திருத்துறைப்பூண்டி அருகே யுகேஜி சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த மேல்நிலை மாணவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை பிரதான நெடுஞ்சாலையில் கிழக்கு கடற்கரை சாலையில் ... மேலும் பார்க்க

மன்னாா்குடி கோயில் குளத்தில் தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஆனித் திருவிழாவையொட்டி வா்த்தக சங்கம் சாா்பில் ஹரித்ராநதி தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆனித் திருவிழா ... மேலும் பார்க்க

கூட்டுறவு கல்வி நிதி வழங்கல்

திருவாரூரில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி நிதிக்கான காசோலையை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி வியாழக்கிழமை வழங்கியது. திருவாரூா் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்க வேண்டிய 2023- 2024 ஆம் ஆண்டுக... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் பொது சுகாதார ஆய்வகம், கிளை நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் - காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 1.25 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், உள்ளிக்கோட்டையில் கிளை நூலகத்துக்கு ரூ. 22 லட்சத்தில் புதிதாக கட்டப்... மேலும் பார்க்க

என்எஸ்எஸ் புதிய மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

மன்னாா்குடி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் புதிதாக சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பின்லே மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.சாம்சன் தங்கையா தலைமை... மேலும் பார்க்க