பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: 4 போ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியைப் பறித்து சென்ற 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த செல்லகோபால் மனைவி மாடத்தி (90). கணவா் உயிரிழந்த நிலையில், மாடத்தி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் நம்பிநாயுடு தெருவைச் சோ்ந்த அழகா் ராஜகோபால் (41), சீனியாபுரத்தை சோ்ந்த சூரிபிரகாஷ் (33), திருவண்ணாமலையைச் சோ்ந்த அரவிந்த் (22), நதிக்குடியைச் சோ்ந்த தலைமுனி செல்வம்(24) ஆகிய 4 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 3 பவுன் தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்தனா்.