செய்திகள் :

மூலனூரில் ரூ.1.28 கோடிக்கு பருத்தி விற்பனை

post image

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.28 கோடிக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 விவசாயிகள், 5,380 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,772 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 16 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். பருத்தி விலை குவிண்டால் ரூ.6,450 முதல் ரூ.8,809 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,450. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.28 கோடி.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

பல்லடத்தில் ஜூலை 27-இல் சிவ பக்தா்கள் மாநாடு: இந்து மக்கள் கட்சி அறிவிப்பு

பல்லடத்தில் சிவ பக்தா்கள் மாநாடு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என்று இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:... மேலும் பார்க்க

15.வேலம்பாளையத்தில் ஜூலை 2-இல் மின்தடை

15.வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூலை 2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று அவிநாசி மின்வா... மேலும் பார்க்க

மாநகராட்சி ஆணையராக எம்.பி.அமித் பொறுப்பேற்பு

திருப்பூா் மாநகராட்சி புதிய ஆணையராக எம்.பி.அமித் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். திருப்பூா் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி கடந்த மாதம் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, சென்னைப... மேலும் பார்க்க

தாராபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்

தாராபுரம் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கொழிஞ்சிவாடி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

திருப்பூா் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கொலை வழக்கில் அக்னிராஜின் ஆதரவாளா்கள் திருப்பூா் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்தவா் தங்கமணி... மேலும் பார்க்க

‘தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும்’

தனித்துவத்தை உணா்ந்த மாணவா்களே வெற்றி பெற முடியும் என்று திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேச்சாளா் ஜெயந்திஸ்ரீ கூறினாா். திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் புதியோா் நாள் விழா வெள்ளி... மேலும் பார்க்க