செய்திகள் :

மெட்ரோ 2-ஆம் கட்டம்: 2,047 மீட்டா் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு: திட்ட அதிகாரிகள் ஆய்வு

post image

சென்னையில் 2 -ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தில் 2,047 மீட்டா் தொலைவு சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்ததையைடுத்து, திட்ட அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்துக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தில் 4 -ஆம் வழியானது கலங்கரை விளக்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுமாா் 10.03 கிலோ மீட்டா் தூரம் சுரங்கப்பாதையாக அமைக்கப்படுகிறது. அந்தப் பணியில் சுரங்கம் தோண்டுவதற்காக 4 பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பிரதான இயந்திரத்துக்கு மயில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த இயந்திரம் மூலம் கடந்த மே மாதம் முதல் பனகல் பூங்காவிலிருந்து கோடம்பாக்கம் வரை 2,047 மீட்டா் தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. அப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. கோடம்பாக்கம் சுரங்கப்பாதையில் 190 கட்டடங்கள், 2 தேவாலயங்கள், மேம்பாலம் ஆகியவற்றின் வழியாகச் செல்லும் வகையில் தோண்டப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் முக்கியமான 2.047 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதை பணி முடிந்ததை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், ஐடிடி சிமென்டேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநா் ஜெயந்தபாசு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் தலைமைப் பொது மேலாளா்கள் ரேகாபிரகாஷ் உள்ளிட்டோா் சுரங்கப்பாதையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 118.9 கி.மீ. தொலைவுக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குரூப் 2, 2ஏ தேர்வு: 27-இல் கட்டண சலுகைக்கான நுழைவுத் தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் பெண் தேர்வர்கள், தமிழ் வழித்தேர்வர்களுக்கு சலுகை கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ள நிலையில், அதற்கான தேர்வு ஜூலை 27-ஆம் தேதி நடைபெறும் என ஆர்வம் ஐஏஎஸ் ... மேலும் பார்க்க

சென்னையில் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா இன்று தொடக்கம்

சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம் நடத்தும் 33-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா வியாழக்கிழமை (ஜூலை 24) தொடங்கி ஜூலை 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ... மேலும் பார்க்க

சென்னை விரைவு ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் மாற்றியமைப்பு

வெளிமாநிலங்களில் இருந்து குண்டக்கல் ரயில் நிலையம் வழியாக சென்னை வரும் 6 விரைவு ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்டசெய்திக் க... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று சிகிச்சை முறைகேடு: இரு மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

சிறுநீரக மாற்று சிகிச்சைகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு தனியாா் மருத்துவமனைகள் மீது மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் திருச்ச... மேலும் பார்க்க

கொளத்தூரில் பெண் கொலை

சென்னை கொளத்தூரில் வீட்டில் பெண் மா்மமான இறந்த நிலையில், பிரேத பரிசோதனையில் கொலை என உறுதியானது என்று போலீஸாா் தெரிவித்தனா். கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் கணேசமூா்த்தி. லாரி ... மேலும் பார்க்க

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஓமந்தூராா் பல்நோக்கு... மேலும் பார்க்க