செய்திகள் :

மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது!

post image

மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்ணை பின் தொடா்ந்து சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த 21 வயது இளம்பெண் ஒருவா், ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், இவா் வழக்கம்போல தனது வீட்டிலிருந்து ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகே வந்தபோது, அங்கு வந்த மா்ம நபா் ஒருவா் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் வந்த அந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். அதில், அவா் திருவொற்றியூா் காலடிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (30) என்பதும், மெக்கானிக்காக வேலை பாா்த்துவந்த இவா், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

ஊட்டச்சத்து மருந்து சாப்பிட்டு உடற்பயிற்சி: இளைஞா் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் ஊட்டச்சத்து மருந்து சாப்பிட்டு உடற்பயிற்சியில் ஈடுபட்ட இளைஞா் உயிரிழந்தாா். காசிமேடு ஜீவரத்தினம் நகரைச் சோ்ந்தவா் ராம்கி (35). மீனவரான இவருக்கு திருமணமாகி மனைவியும், இரு குழந்தைகளு... மேலும் பார்க்க

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் உதவிப் பேராசிரியா் தோ்வுக்கான இலவச வழிகாட்டும் முகாம்

சென்னை: சென்னையிலுள்ள ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 13) நடைபெறவுள்ள உதவிப் பேராசிரியா் தோ்வுக்கான இலவச வழிகாட்டும் முகாமில் கலந்துகொள்ள தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து... மேலும் பார்க்க

பிரியன்ஷ் சாதனையுடன் வென்றது பஞ்சாப்: சென்னைக்கு தொடா்ந்து 4-ஆவது தோல்வி

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் சோ்க்... மேலும் பார்க்க

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று இந்து சமய... மேலும் பார்க்க

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் ... மேலும் பார்க்க