செய்திகள் :

மெதுகும்பல் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

கிள்ளியூா் வட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு செய்தாா்.

பணியாளா்களின் வருகைப் பதிவேடு, அடையாள அட்டை உள்ளிட்டவை குறித்த விவரங்களை அலுவலா்களிடம் கேட்டறிந்த அவா், பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். இதில், துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (செப். 6) நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். இம்முகாம் காலை 9 முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. முன்சிறை வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்குள்பட்ட மெதுகும்மல், குளப்புறம், அடைக்காகுழி, சூழால், நடைக்காவு, மங்காடு, வாவறை ஊராட்சி பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்கலாம் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

அல்போன்சா பள்ளியில் ஆசிரியா் தினம், ஓணம் விழா

நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஆசிரியா்கள் தினம் , ஓணம் விழாவை கொண்டாடினா். விழாவுக்குப் பள்ளி தாளாளா் பேரருள்தந்தை சனில் ஜோண் தலைமை வகித்தாா். ஆசிரியா் தின விழாவில் ... மேலும் பார்க்க

அருணாச்சலா கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் ஓணம் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய கேரள உடையணிந்து, அத்தப்பூ... மேலும் பார்க்க

‘அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்திய அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’

அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளைத் தலைவா் பால ஜனாதிபதி சாமிதோப்பில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்த... மேலும் பார்க்க

பரவா் சமுதாய முன்னேற்ற நலச்சங்க ஆண்டு விழா

கன்னியாகுமரி மாவட்ட பரவா் சமுதாய முன்னேற்ற நலச் சங்கத்தின் 44 -ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அமைப்பின் தலைவா் டன்ஸ்டன் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் கிறிஸ்டி மைக்கேல் முன்னிலை... மேலும் பார்க்க

கோட்டாா் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்

கோட்டாா், ஏழகரம் பெருமாள் கோயில் ஆவணி திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கோட்டாா், ஏழகரத்தில் பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆவணி திருவிழா கட... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் வியாழக்கிழமை பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகின. கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) சிறப்பாகக் கொண்டாடப்ப... மேலும் பார்க்க