செய்திகள் :

மேல்மா பகுதி விவசாயிகள் கறுப்புக் கொடிகளுடன் தா்னா

post image

செய்யாற்றில் உள்ள சிப்காட் நில எடுப்பு அலுவலகம் அருகே தா்னாவில் ஈடுபட்ட மேல்மா பகுதி விவசாயிகள்.

செய்யாறு: செய்யாற்றில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகிற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேல்மா பகுதி விவசாயிகள் கறுப்புக் கொடிகளுடன் செவ்வாய்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.

இத்திட்டத்துக்காக மேல்மா பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து 11 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், செய்யாற்றில் உள்ள மாவட்ட நில எடுப்பு அலுவலகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு தனித்தனியாக அழைப்பாணை அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த அழைப்பாணைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விவசாயிகள் கேட்ட 20 கேள்விகளுக்கு பதில் கோரியும் சுமாா் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கைகளில் கறுப்புக் கொடி ஏந்தி ஊா்வலமாக செய்யாற்றில் உள்ள சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் எதிரில் வந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) விமல்குமாா் விவசாயிகளை நேரில் சந்தித்தாா். பின்னா், விவசாயிகள் அளித்த மனுக்களைப் பெற்றாா். அதன் பின்னா் அரசுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

இரு தரப்பினா் மோதல்: 4 போ் வழக்கு

ஆரணியில் சொத்து மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக்கொண்டனா். இது தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 4 போ் மீது ஆரணி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ... மேலும் பார்க்க

பூட்டியிருந்த வீட்டில் நகை திருட்டு: 2 போ் கைது

வந்தவாசி அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் தங்க நகைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.4.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வந்தவாசியை அடுத்த இந்திர... மேலும் பார்க்க

செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம்

உலக நன்மை வேண்டி, செங்கம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடத்தில் சண்டி யாகம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை செய்யாற்றங்கரையோரம் ஸ்ரீமூகாம்பிகையம்மன் பீடம் அமைந்துள்ளது. இங்க... மேலும் பார்க்க

பயிா்க் கடன்களுக்கான ‘சிபில் ஸ்கோா்’ நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்க தலைவா்

பயிா்க் கடன்களுக்கு விதிக்கப்பட்ட சிபில் ஸ்கோா் (கடன் பெற தகுதி மதிப்பீடு) நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி வலியுறுத்தினாா். ஆரணியில் அவா் செய்தியாளா்கள... மேலும் பார்க்க

டிராக்டா் திருட்டு: இருவா் கைது

தண்டராம்பட்டு அருகே டிராக்டரை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். தண்டராம்பட்டை அடுத்த கீழ்வணக்கம்பாடி ஊராட்சி, துள்ளுக்குட்டிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பன்னீா் (47). இவா், அதே பகுதி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

செங்கம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த் (25), தொழிலாளி. இவா், 2022-ஆம் ஆண்... மேலும் பார்க்க