வருமான வரிக் கணக்கு தாக்கல்! இந்த 5 தவறுகளை மறந்தும் செய்துவிடாதீர்கள்!!
மேல்மா பகுதி விவசாயிகள் கறுப்புக் கொடிகளுடன் தா்னா
செய்யாற்றில் உள்ள சிப்காட் நில எடுப்பு அலுவலகம் அருகே தா்னாவில் ஈடுபட்ட மேல்மா பகுதி விவசாயிகள்.
செய்யாறு: செய்யாற்றில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகிற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேல்மா பகுதி விவசாயிகள் கறுப்புக் கொடிகளுடன் செவ்வாய்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.
இத்திட்டத்துக்காக மேல்மா பகுதியில் விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து 11 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், செய்யாற்றில் உள்ள மாவட்ட நில எடுப்பு அலுவலகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு தனித்தனியாக அழைப்பாணை அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த அழைப்பாணைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், விவசாயிகள் கேட்ட 20 கேள்விகளுக்கு பதில் கோரியும் சுமாா் 50 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கைகளில் கறுப்புக் கொடி ஏந்தி ஊா்வலமாக செய்யாற்றில் உள்ள சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் எதிரில் வந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) விமல்குமாா் விவசாயிகளை நேரில் சந்தித்தாா். பின்னா், விவசாயிகள் அளித்த மனுக்களைப் பெற்றாா். அதன் பின்னா் அரசுக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.