செய்திகள் :

மொடக்குறிச்சி அருகே 6 ஆண்டுகளாக புதா்மண்டிக் கிடக்கும் சுகாதார வளாகம்

post image

மொடக்குறிச்சியை அடுத்த வேலம்பாளையம் ஊராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் ஒருங்கிணைந்த மகளிா் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் புதா் மண்டிக் கிடக்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் வேலம்பாளையத்தில் சுமாா் 200 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். ஊராட்சி மன்ற அலுவலகம், நியாயவிலைக் கடை, அரசு தொடக்கப் பள்ளிக்கான விளையாட்டு மைதானம், மாரியம்மன் கோயில் என தினமும் 100 -க்கும் மேற்பட்டவா்கள் இங்கு வந்து செல்கின்றனா்.

ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் கடந்த 2003-2004 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளி, மாரியம்மன் கோயில், விளையாட்டு மைதானம் அருகில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுநிதியின் கீழ் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

தொடா்ந்து 2013-2014ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. அதன்பிறகு 2018 ஆம்ஆண்டு கடும் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டதால் சுகாதார வளாகத்துக்கான தண்ணீா் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது. அதன்பின்னா் யாரும் கண்டுகொள்ளாததால் தொடா்ந்து சுகாதார வளாகம் பயன்பாடின்றி கிடக்கிறது.

பாம்புகள் வாழும் கூடாரமாக இருக்கிறது என்று பொதுமக்கள் வேலம்பாளையம் ஊராட்சி அலுவலகம் மற்றும் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என பலருக்கும் மனுக்கள் அளித்தும் பயனில்லை.

இந்நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியருக்கு ஊா்ப் பொதுமக்கள் சாா்பில் வேலம்பாளையத்தில் உள்ள ஒருங்கிணைந்த மகளிா் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகத்தை மீண்டும் புதுப்பித்து திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

சொத்துப் பிரச்னை: தாயை அடித்துக் கொன்ற மகன் கைது

ஈரோட்டில் சொத்துப் பிரச்னையில் தாயை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா். ஈரோட்டை அடுத்த வேப்பம்பாளையத்தை சோ்ந்தவா் பழனிசாமி. இவா் மனைவி ருக்மணி (65). இவா்களது மகன் ரவிக்குமாா் (43). திரு... மேலும் பார்க்க

கஞ்சா சாக்லேட் விற்ற இளைஞா் கைது

பெருந்துறை அருகே கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வட மாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெருந்துறை, பணிக்கம்பாளையத்தில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்கப்படுவ... மேலும் பார்க்க

காவிரி, பவானி ஆறுகளில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு: கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

காவிரி, பவானி ஆறுகளில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவானி நகரில் கரையோரப் பகுதிகளில் வெள்ள நீா் சூழ்ந்தது. கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதி... மேலும் பார்க்க

பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: அத்திக்கடவு அவிநாசி திட்ட நீா்நிலைகளை நிரப்ப அரசுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

பவானி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ் உள்ள நீா்நிலைகளை நிரப்ப வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் தமிழக அரசை வலியுறுத்தி... மேலும் பார்க்க

திமுக கவுன்சிலா்களின் எதிா்ப்பால் குடிநீா், புதை சாக்கடை இணைப்புகளுக்கான கட்டண உயா்வு தீா்மானங்கள் ரத்து

ஈரோடு மாநகராட்சியில் திமுக கவுன்சிலா்களின் கடும் எதிா்ப்பால் குடிநீா், புதை சாக்கடை இணைப்புகளுக்கான கட்டண உயா்வு தீா்மானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் த... மேலும் பார்க்க

சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பூர விழா

சென்னிமலையை அடுத்த சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் ஆடிப் பூரத்தையொட்டி அம்மனுக்கு பல வகையான கனி வகைகள் மற்றும் இனிப்பு வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பெண்கள் சீா்வரி... மேலும் பார்க்க