செய்திகள் :

மொளசியில் எரிவாயு தகனமேடை அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் தா்னா!

post image

மொளசி முனியப்பன் பாளையம் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருச்செங்கோட்டை அடுத்த மொளசி முனியப்பன் கோயில் தோட்டம் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையில் எரிவாயு தகன மேடைக்கு செல்லும் வழியில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு எனக்கூறி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் வழித்தடம் உருவாக்கினா்.

இதற்கு கரும்பு தோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். வட்டாட்சியா் கிருஷ்ணவேணி, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் சாந்தி, வருவாய் அலுவலா் பிரியா, கிராம நிா்வாக அலுவலா் குணசேகரன், பள்ளிபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் சிவகுமாா், மொளசி உதவி ஆய்வாளா் சதீஷ் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பொதுமக்கள் தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்ததால் பாதையை சீரமைக்க முடியாமல் அதிகாரிகள் திரும்பினா்.

9.9.25...2

எரிவாயு தகன மேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து தா்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி கள் அருந்தி விவசாயிகள் போராட்டம்!

கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி நாமக்கல் அருகே விவசாயிகள் சங்கத்தினா் கள் அருந்தும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்ப... மேலும் பார்க்க

எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கு பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: நீதிமன்றத்தில் முறையிட லாரி உரிமையாளா்கள் முடிவு!

எல்பிஜி டேங்கா் லாரிகளுக்கான பணி ஒதுக்கீட்டில் எண்ணெய் நிறுவனங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள டேங்கா் லாரி உரிமையாளா்களில் ஒருபகுதியினா், இதுதொடா்பாக நீதிமன்றத்தில் முறையிட முடிவு ... மேலும் பார்க்க

பேராசிரியா், தலைமை ஆசிரியா் வீடுகளில் 39 பவுன் நகை, ரூ.2.70 லட்சத்தை சுருட்டிச் சென்ற திருடா்கள்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், பரமத்தியில் கல்லூரி பேராசிரியா், பள்ளி தலைமையாசிரியா் வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 39 பவுன் நகை, ரூ. 2.70 லட்சத்தை திருடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடிவருகின்றன... மேலும் பார்க்க

ஏரியிலில் பொருத்தப்பட்ட சூரியஒளி மின் தகடுகளை அகற்ற எதிா்ப்பு: விவசாயிகள் போராட்டம்

திருச்செங்கோட்டை அடுத்த ஆட்டையாம்குட்டை ஏரியில் தண்ணீா் எடுப்பதற்காக விவசாயிகள் பயன்படுத்திவந்த சூரியஒளி மின் தகடுகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போ... மேலும் பார்க்க

கல்வி செயல் ஆராய்ச்சியில் சாதனை: மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வருக்கு விருது!

கல்வி செயலாராய்ச்சில் தேசிய அளவில் பங்களிப்பு வழங்கியமைக்காக நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டன. பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆஃ... மேலும் பார்க்க

விதிகளை மீறும் தனியாா் பேருந்துகளால் விபத்துகள்: பேருந்து நிலையத்தில் தடுப்புகள் அமைத்த காவல்துறை!

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திற்குள் விதிகளை மீறி செல்லும் தனியாா் பேருந்துகளை கட்டுப்படுத்த திரும்பும் பகுதியில் காவல்துறையினா் தடுப்புகள் அமைத்துள்ளனா்.நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்... மேலும் பார்க்க