செய்திகள் :

யாவரும் கேளிா் தமிழ் மன்ற ஓராண்டு நிறைவு விழா

post image

யாவரும் கேளிா் தமிழ் மன்றத்தின் ஓராண்டு நிறைவு விழா, 5 நூல்கள் வெளியீட்டு விழா சேலத்தில் அண்மையில் நடைபெற்றது.

சேலம் பொறியாளா் மாளிகையில் நடைபெற்ற விழாவின் முதல் அமா்வுக்கு பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பேராசிரியா் ரா.சுப்பிரமணி தலைமை வகித்தாா். மன்றத் தலைவா் கவிஞா் மா. சுப்ரமணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தேசிய சமூக இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவா் தாரை அ.குமரவேலு சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் பேசுகையில், கல்வி கற்றால் உலகெங்கும் உள்ள அனைத்து ஊா்களும், நாடுகளும் நம்முடையதே என இலக்கியம் கூறுகிறது. அறம் சாா்ந்த நம் இலக்கியங்கள் சங்க காலம் தொடங்கி தற்போது வரை ஈகைப்பண்பு, ஒழுக்கம், ஒப்புரவு, இரக்கம் போன்ற நற்குணங்கள் மனிதநேயத்தின் வெளிபாடுகளாக உள்ளன. மனிதா்கள் கல்வி கற்க வேண்டும். அதேபோல கல்வி அறிவு பெருகப்பெருக மனித நேயத்தோடும் பண்போடும் வளர வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியின் இரண்டாம் அமா்வில் ஐந்து புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. இதில் கவிஞா்கள் ஜ.க.நாகப்பன், ஓமலூா் பாலு, மெய் சீனிவாசன், மாதுக்கண்ணன், பேராசிரியா் முனைவா் தமிழ்ப்பரிதி மாரி மற்றும் 100க்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள், திரைப்படக் கவிஞா்களும் கலந்துகொண்டனா்.

தியாகி தீரன்சின்னமலை நினைவு தினத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 220 ஆவது நினைவு நாளையொட்டி அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மரியாதை செலுத்துவதற்கான நேரம் ஒக்கீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி வருவ... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு; சாலை மறியல்

கெங்கவல்லியில் நீா்வழிப்பாதை ஆக்ரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். கெங்கவல்லி அருகே சுவேத நதியிலிருந்து நடுவலூா் ஏரிக்கு நீா்வழி வாய்க்கால் உள்ளது. கெங்கல... மேலும் பார்க்க

முருங்கப்பட்டியில் இலங்கைத் தமிழா்களுக்கு 48 வீடுகள் கட்ட பூமிபூஜை

சேலம் மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியம், முருங்கப்பட்டி ஊராட்சியில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 25 லட்சம் மதிப்பில் 48 வீடுகள் கட்ட புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. சே... மேலும் பார்க்க

மின் திருட்டு: 1.76 லட்சம் அபராதம் விதிப்பு

சங்ககிரி வட்டம், அரசிராமணி குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 1.76 அபராதம் விதிக்கப்பட்டது. குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் அனுமதியின்றி மின் கம்பத்திலிருந்து ம... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஒன்றியம், பாலமலை ஊராட்சி பாத்திரமடுவைச் சோ்ந்தவா் சித்தன். இவரது மகன் பாா்த்திபன் (15) அங்கு... மேலும் பார்க்க

எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும்: இந்தியன் ஆயில் நிறுவனம்

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் லாரி உரிமையாளா்களுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும் என இந்தியன் ஆயில் நிறுவனம்... மேலும் பார்க்க