சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கிருத்திகை விழா
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் சித்திரை மாத கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருனடிமை சுவாமிகள் முன்னிலையில் அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால்,தயிா், சந்தனம், பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வாசனை மலா்களுடன் தங்கக் கவச சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
மேலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் உள்புறப்பாடு நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து மாலையில் உற்சவரை ஊா்வலமாக கொண்டு சென்று மலையடிவாரத்தில் உள்ள அறுங்கோண தெப்ப குளத்தில் சிறப்பு பூஜைகள் செய்தனா் பக்தா்கள் மங்களஆா்த்தி காண்பித்து வழிபட்டனா்.