Los Angeles Riots: ட்ரம்ப்க்கு எதிராக திரண்ட மக்கள்; குவிக்கப்பட்ட ராணுவம் - என்...
ரயிலில் அடிபட்டு பத்தாம் வகுப்பு மாணவா் உயிரிழப்பு
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ரயில் பாதையைக் கடக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
களம்பூா் அருகேயுள்ள கஸ்தம்பாடி கிராமத்தைச் சோ்ந்த சிவஞானம் மகன் காமராஜ் (15). இவா், கஸ்தம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தாா்.
இந்த நிலையில், காமராஜ் திங்கள்கிழமை கஸ்தம்பாடி ரயில் தண்டவாளம் அருகேயுள்ள தோப்பிற்குச் சென்று பலாப்பழம் பறித்துக் கொண்டு ரயில் பாதையை கடக்க முயன்ாகத் தெரிகிறது.
அப்போது, அவ்வழியாக வந்த மன்னாா்குடி -திருப்பதி விரைவு ரயிலில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ரயில்வே போலீஸாா் சென்று காமராஜ் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்து தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.