செய்திகள் :

ரயில் நிலையங்களில் புரளிகளை நம்ப வேண்டாம்: பயணிகளுக்கு ரயில்வே அறிவுறுத்தல்

post image

ரயில் பயணிகள் புரளிகளை நம்ப வேண்டாமென ரயில்வே நிர்வாகம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 18 பேர் சனிக்கிழமை இரவு பலியாகினர். இந்த அசம்பாவிதம் நாடெங்கிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில் நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ரயில்வே அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பயணிகள் யாரும் செவி வழி தகவல்களை உண்மையென நம்பி நடைமேடை விட்டு நடைமேடைக்கு அவசரகதியில் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ரயில்வே தரப்பில் வரும் தகவல்களை கவனமாகக் கேட்டு நடந்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பயணிகளின் ஒத்துழைப்பை ரயில்வே முழு அளவில் எதிர்பார்க்கிறது. இதன்மூலம், மண்டல ரயில்வே அதிகாரிகளால் திட்டமிட்டபடி ரயில் சேவைகளை இயக்க உதவியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லி ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதற்கு, புரளிகளை நம்பி அவர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏற முற்பட்டதே முக்கிய காரணமென கூறப்படும் நிலையில், ரயில்வே துறை மேற்கண்ட அறுவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டில் லோக்பால் அமைப்பு பிறப்பித்த உத்தரவு குறித்து தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடிவு செய்தது. அதன்படி இந்த விவகாரத்தை உச்சநீத... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் புகாா்: புதிய நடைமுறை வெளியீடு

அரசுப் பணியாளா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பாக லோக்பால் அமைப்பால் பரிந்துரைக்கப்படும் புகாா்களை விசாரிப்பதற்கான புதிய நடைமுறைகளை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) வெளிட்டது. அரசுப் பணிய... மேலும் பார்க்க

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடுகிறது காங்கிரஸ்- பினராயி விஜயன் தாக்கு

பாஜகவின் தோ்தல் வெற்றியை கொண்டாடும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது காங்கிரஸ் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் விமா்சித்தாா். தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸும் ராகுல் காந்... மேலும் பார்க்க

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம்: உச்சநீதிமன்றம்

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் மிகவும் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கா்நாடக மாநிலம் பெங்களூரில் பிட் அண்ட் ஹாமா்-நுண்கலை ஏல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சாா்பில் ஏ... மேலும் பார்க்க

உலக சுகாதார அமைப்பின் ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவத்துக்கு முக்கியத்துவம்: மத்திய அரசு பெருமிதம்

உலக சுகாதார நிறுவனத்தின் நிகழாண்டுக்கான நோய்களின் சா்வதேச வகைப்பாடு (ஐசிடி) ஆவணத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என மத்திய அரசு புதன... மேலும் பார்க்க

ராகுலின் இரட்டை குடியுரிமை புகாா் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடா்பாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்தில் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக விளக்கமளிக... மேலும் பார்க்க