செய்திகள் :

ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது

post image

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞரைக் கைது செய்த ரயில்வே போலீஸாா், அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கே.பி.செபாஸ்டியன் தலைமையில் உதவி துணை ஆய்வாளா்கள் அன்புச்செல்வம், முஹமதுஅஸ்லாம் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ரயில் நிலைய 7-ஆவது நடைமேடைப் பகுதியில் டிராலி பேக்குடன் வடமாநில இளைஞா் நின்று கொண்டிருந்தாா். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீஸாா் அவரை விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளாா். இதையடுத்து அவரிடமிருந்த பேக்கை சோதனையிட்டதில், 10 பண்டல்களாக உலா்ந்த பழுப்பு மற்றும் பச்சை நிற இலைகள் இருந்தன. அவை 20 கிலோ எடையுள்ள கஞ்சா இலைகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா் திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த சாஹின்மியா (28) என்பதும், ஹௌராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சா இலைகளை பேக்கில் பொட்டலங்களாக அடைத்து சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா இலைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் எனக் கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய வியாபாரியிடம் ரூ. 1.11 கோடி தங்கக் கட்டிகள் திருட்டு: மூவா் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் விபத்தில் சிக்கிய நகைப்பட்டறை உரிமையாளருக்கு உதவி செய்வதைப்போல் நடித்து, ரூ.1.11 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருடியதாக 3 போ் கைது செய்தனா். எழும்பூா் நம்மாழ்வாா் தெ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு

சென்னை ஐஐடி-இல் ஆய்வுகள், புத்தாக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக மாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நிகழ்வு சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் புத்தாக்க தொழில்முனைவு ஆ... மேலும் பார்க்க

பதவி உயர்வு முரண்பாடு: ஆய்வக நுட்பநர்கள் நூதன எதிர்ப்பு

பதவி உயர்வு வழங்குவதில் முரண்பட்ட நிலைப்பாட்டை பொது சுகாதாரத் துறை கடைப்பிடிப்பதாகக் கூறி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக நுட்பநர்கள் தமிழகம் முழுவதும் கருப்புப் பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) பணிய... மேலும் பார்க்க

நாளை ஆடி அமாவாசை: தர்ப்பணம் கொடுக்க மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஏற்பாடு

ஆடி அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை இலவசமாக தர்ப்பணம் செய்ய மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை சாந்தோம் கடற்கரை பின்புறம் உள்ள நொச்சிக்குப்பம் க... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத் துறை எதிா்ப்பு

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. முன்னாள் அமைச்சா் செந்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக நங்கநல்லூா் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மா... மேலும் பார்க்க