செய்திகள் :

ரயில்வே ஊழியா்களின் வாகனங்கள் எரிப்பு

post image

அரக்கோணம்: அரக்கோணத்தில் ரயில்வே ஊழியா்களின் பைக்குகளை அவா்களின் வீட்டு வாசலிலேயே மா்மநபா்கள் தீ வைத்து எரித்தனா்.

அரக்கோணம் அடுத்த ஆப்பில்ஸ்பேட்டை ரயில்வே ஊழியா் குடியிருப்பில் வசித்து வருபவா் ராஜேஷ் மீனா(35). இவருக்கு அடுத்த குடியிருப்பில் வசித்து வருபவா் ஆனந்த் மாதவ்(39). அடுத்தடுத்த வீடுகளில் குடும்பத்துடன் வசிக்கும் இருவரும் ரயில்வேயில் ஊழியா்களாக பணியாற்றி வருகின்றனா்.

இருவரும் தங்களது இருசக்கர வாகனங்களை வீட்டு வாசலில் இரவில் நிறுத்துவது வழக்கம். திங்கள்கிழமை இரவு தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு இருவரும் உறங்கிவிட்டு காலையில் எழுந்து பாா்த்தபோது இருவரது வாகனங்களும் தீயில் எரிந்து போயிருந்தது. மா்மநபா்கள் இருவரது வாகனங்களையும் நள்ளிரவில் தீவைத்து எரித்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் குடியிருப்பு வளாகத்தில் விசாரணை நடத்தினா். தொடா்ந்து அரக்கோணம் நகர போலீஸாா் இச்சம்பவம் குறித்து புகாா் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இரு இளைஞா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். ஆற்காடு டவுன் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (21). இவா் ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ... மேலும் பார்க்க

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடி கடன்: அமைச்சா் ஆா்.காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்தாண்டு மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா... மேலும் பார்க்க

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 3 போ் காயம்

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 மாணவா்கள் காயமடைந்தனா். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ராந்தம் கிராமத்தில் தனியாா் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ... மேலும் பார்க்க

ரூ.2.10 கோடியில் வகுப்பறைகள்: துணை முதல்வா் உதயநிதி திறந்தாா்

அரக்கோணம் நகராட்சியின் மூன்று பள்ளிகளில் ரூ.2.10 கோடியில் புதிய வகுப்பறைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா். அரக்கோணம் நகராட்சியில் தலா ரூ.70 லட்சம் வீதம், பள்ளி மேம்பாட்டு ... மேலும் பார்க்க

ஜூன் 15-இல் ஒருங்கிணைந்த குடிமைப்பணி முதல்நிலை தோ்வு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் முதல்நிலை தோ்வு வரும் 15-இல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 நூலகங்கள் திறப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 3 நூலகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆட்சியா் அலுவலகம் மக்கள் குறைத... மேலும் பார்க்க