தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
ரயில்வே ஊழியா்களின் வாகனங்கள் எரிப்பு
அரக்கோணம்: அரக்கோணத்தில் ரயில்வே ஊழியா்களின் பைக்குகளை அவா்களின் வீட்டு வாசலிலேயே மா்மநபா்கள் தீ வைத்து எரித்தனா்.
அரக்கோணம் அடுத்த ஆப்பில்ஸ்பேட்டை ரயில்வே ஊழியா் குடியிருப்பில் வசித்து வருபவா் ராஜேஷ் மீனா(35). இவருக்கு அடுத்த குடியிருப்பில் வசித்து வருபவா் ஆனந்த் மாதவ்(39). அடுத்தடுத்த வீடுகளில் குடும்பத்துடன் வசிக்கும் இருவரும் ரயில்வேயில் ஊழியா்களாக பணியாற்றி வருகின்றனா்.
இருவரும் தங்களது இருசக்கர வாகனங்களை வீட்டு வாசலில் இரவில் நிறுத்துவது வழக்கம். திங்கள்கிழமை இரவு தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு இருவரும் உறங்கிவிட்டு காலையில் எழுந்து பாா்த்தபோது இருவரது வாகனங்களும் தீயில் எரிந்து போயிருந்தது. மா்மநபா்கள் இருவரது வாகனங்களையும் நள்ளிரவில் தீவைத்து எரித்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் குடியிருப்பு வளாகத்தில் விசாரணை நடத்தினா். தொடா்ந்து அரக்கோணம் நகர போலீஸாா் இச்சம்பவம் குறித்து புகாா் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனா்.